NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தானே பாய்லர் விபத்து பலி எண்ணிக்கை உயர்வு: கொதிகலன் பதிவு செய்யப்படவில்லை என்று விசாரணையில் அம்பலம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தானே பாய்லர் விபத்து பலி எண்ணிக்கை உயர்வு: கொதிகலன் பதிவு செய்யப்படவில்லை என்று விசாரணையில் அம்பலம்
    பல பாய்லர்கள் வெடித்ததில் 60 பேர் காயமடைந்தனர்

    தானே பாய்லர் விபத்து பலி எண்ணிக்கை உயர்வு: கொதிகலன் பதிவு செய்யப்படவில்லை என்று விசாரணையில் அம்பலம்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 24, 2024
    11:55 am

    செய்தி முன்னோட்டம்

    மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில், நேற்று மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.

    டோம்பிவிலி எம்ஐடிசி வளாகத்தில் வியாழன் பிற்பகல் நடந்த இந்தச் சம்பவத்தில், அடுத்தடுத்து பல பாய்லர்கள் வெடித்ததில் 60 பேர் காயமடைந்தனர்.

    தேசிய பேரிடர் மீட்புப் படையின் கூற்றுப்படி, அமுதன் கெமிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள பாய்லருக்குள் வெடிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் எனவும், அதில் அதிக வினைத்திறன் மற்றும் நிலையற்ற பெராக்சைடுகளைப் பயன்படுத்தியிருக்கூடும் எனவும், அதன் காரணமாகவே வெடித்திருக்க கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தீ விபத்து

    கொதிகலன் பதிவு செய்யப்படவில்லை: தொழில்கள் மற்றும் தொழிலாளர் துறை

    வெடிவிபத்துக்கான சரியான காரணத்தை அறிய விசாரணை நடந்து வருகிறது.

    அறிக்கைகளின்படி, இரசாயனங்கள் நிரப்பப்பட்ட பல டிரம்கள் அடுத்தடுத்து வெடித்து, ஒரு பெரிய தீ விபத்தை ஏற்படுத்தியது. இந்த தீயினை அணைக்க எட்டு மணி நேரம் ஆனது என கூறப்படுகிறது.

    தொழிற்சாலையின் உரிமையாளர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    மேலும், தொழிற்சாலையில் உள்ள பாய்லர், இந்திய கொதிகலன் விதிமுறைகள், 1950 இன் கீழ் பதிவு செய்யப்படவில்லை என்பதை மாநில தொழில்கள் மற்றும் தொழிலாளர் துறை வெளிப்படுத்தியது.

    விபத்து விவரங்கள்

    விபத்து விவரங்கள் மற்றும் அதன் உடனடி பின்விளைவுகள்

    நேற்று மதியம் 1:40 மணியளவில் முதல் வெடிப்பு நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து மேலும் பல பாய்லர்கள் வெடித்து சிதறின.

    அந்த நேரத்தில், பத்து ஊழியர்கள் தொழிற்சாலையில் இருந்துள்ளனர்: மேலாளர், ஆறு தொழிலாளர்கள் மற்றும் மூன்று காவலாளிகள். பாய்லர் வெடிப்புகளால் கண்ணாடிகள் உடைந்து 4 கிமீ சுற்றளவில் சிதறி, கூரைகள் சேதமடைந்தன.

    இது குடியிருப்பாளர்களிடையே பீதியை ஏற்படுத்தியது மட்டுமின்றி, ஒரு சிலருக்கு படுகாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    அக்கம் பக்கத்தில் இருந்த ஆம்பர் கெமிக்கல் கம்பெனி, எம்.கே.ஜி., மெட்ரோபாலிட்டன் உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்கும் தீ பரவியதால், அப்பகுதியில் இருந்து புகை கிளம்பியது.

    விபத்து நடந்த இடத்திற்கு முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பார்வையிட்டு, அரசு சார்பாக இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விபத்து
    மகாராஷ்டிரா

    சமீபத்திய

    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    விபத்து

    ஹைதராபாத்தில் குதிரையில் உணவு விநியோகம் செய்த ஸோமாட்டோ ஊழியர்- வைரல் வீடியோ சோமாட்டோ
    வீடியோ: பஞ்சாப் மாநிலத்தில் திடீரென்று மேம்பாலம் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு   பஞ்சாப்
    பெரும் விபத்தில் சிக்கியது ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி சென்ற கார்  ஜம்மு காஷ்மீர்
    உல்லாசமாக துவங்கிய பள்ளி சுற்றுலா, துயரத்தில் முடிந்தது: 14 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த வதோதரா படகு விபத்து குஜராத்

    மகாராஷ்டிரா

    350 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவுக்கு வர இருக்கும் சத்ரபதி சிவாஜியின் புலி நகங்கள் இந்தியா
    48 மணிநேரத்தில் 15 குழந்தைகள் உட்பட 31 பேர் பலி: மகாராஷ்டிரா மருத்துவமனையில் பரபரப்பு  மருத்துவக் கல்லூரி
    நடிகர் விஷாலின் லஞ்ச குற்றச்சாட்டுக்கு, சென்சார் போர்டு பதில் தமிழ் திரைப்படம்
    நடிகர் ஷாருக்கானுக்கு Y+ பிரிவு பாதுகாப்பு ஷாருக்கான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025