NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மணிப்பூர் வன்முறை: இதுவரை 62 பேர் பலி, 230 பேர் காயம் 
    மணிப்பூர் வன்முறை: இதுவரை 62 பேர் பலி, 230 பேர் காயம் 
    இந்தியா

    மணிப்பூர் வன்முறை: இதுவரை 62 பேர் பலி, 230 பேர் காயம் 

    எழுதியவர் Sindhuja SM
    May 09, 2023 | 03:31 pm 1 நிமிட வாசிப்பு
    மணிப்பூர் வன்முறை: இதுவரை 62 பேர் பலி, 230 பேர் காயம் 
    மாநிலம் முழுவதும் நடந்த கடும் வன்முறைகளால் இதுவரை 35,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

    மணிப்பூரில் கடந்த வாரம் நடந்த கலவரம் மற்றும் இன மோதல்களால் குறைந்தது 62 பேர் உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடந்த வன்முறைகளால் தற்போது, அந்த வடகிழக்கு மாநிலம் முழுவதும் பதட்டமான அமைதி நிலவி வருகிறது. வன்முறையில் சுமார் 230 பேர் காயமடைந்தனர் என்றும், 1,700 வீடுகள் எரிக்கப்பட்டது என்றும் மணிப்பூரின் முதல்வர் என் பிரேன் சிங் நேற்று கூறி இருந்தார். மேலும், மாநிலம் முழுவதும் நடந்த கடும் வன்முறைகளால் இதுவரை 35,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த வாரம், மணிப்பூரில் சுமார் 30 பழங்குடியின குழுக்களுக்கும், பழங்குடியினரல்லாத மெய்த்தே இனத்தவருக்கும் இடையே பெரும் கலவரம் வெடித்தது. மெய்த்தே சமூகத்தை ST பட்டியலில் சேர்க்கக்கூடாது என்று கூறி இந்த வன்முறை போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

    ஏன் மெய்த்தே சமூகத்தினரை ST பட்டியலில் சேர்ப்பதற்கு இவ்வளவு எதிர்ப்பு?

    சிறுபான்மை மலைவாழ் சமூகத் தலைவர்கள், மெய்தே சமூகம் ஒப்பீட்டளவில் நல்ல நிலையில் இருப்பதாகவும், அவர்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்குவது நியாயமற்றது என்றும் கூறி இருந்தனர். மணிப்பூர் மாநிலத்தின் மக்கள்தொகையில் 53%பேர் மெய்த்தே சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த சமூகத்தினர், மணிப்பூர் பள்ளத்தாக்கில் வசிப்பதோடு, "மியான்மர் மற்றும் வங்காளதேசியர்களின் பெரிய அளவிலான சட்டவிரோத குடியேற்றத்தால்" அவர்கள் சிரமத்தை எதிர்கொள்வதாகக் கூறுகின்றனர். தற்போதுள்ள சட்டத்தின்படி மலைப்பகுதிகளில் மெய்த்தே சமூகத்தினர் குடியேற அனுமதி இல்லை. இதெற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்காக தங்களையும் பழங்குடியின பட்டியலில் சேர்க்குமாறு அவர்கள் கோரி வருகின்றனர். இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த வாரம் பழங்குடியின மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு அணிவகுப்பை நடத்தினர். இதனையடுத்து, அம்மாநிலம் முழுவதும் வன்முறை வெடித்தது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    கலவரம்

    இந்தியா

    பாலத்தில் இருந்து கவிழ்ந்து விழுந்த பேருந்து: மத்தியப் பிரதேசத்தில் 22 பேர் பலி மத்திய பிரதேசம்
    இந்தியாவில் ஒரே நாளில் 1,331 கொரோனா பாதிப்பு: 11 பேர் உயிரிழப்பு கொரோனா
    தேர்தலுக்கு முன் கர்நாடக மக்களுக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதம் மோடி
    கர்நாடக தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியடையும் 92 சதவீத பெண் வேட்பாளர்கள் கர்நாடகா

    கலவரம்

    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம் காவல்துறை
    2002 குஜராத் கலவரம்: 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேர் விடுதலை குஜராத்
    கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் - சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல்  தமிழ்நாடு
    மணிப்பூரில் மீண்டும் வன்முறை: ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ராணுவம் குவிக்கப்பட்டது  இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023