NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நள்ளிரவில் பெண் ஐஏஎஸ் அதிகாரி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த தாசில்தார் சஸ்பெண்ட்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நள்ளிரவில் பெண் ஐஏஎஸ் அதிகாரி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த தாசில்தார் சஸ்பெண்ட்
    துணை தாசில்தார் மீது அத்துமீறி நுழைந்ததற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    நள்ளிரவில் பெண் ஐஏஎஸ் அதிகாரி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த தாசில்தார் சஸ்பெண்ட்

    எழுதியவர் Sindhuja SM
    Jan 24, 2023
    10:33 am

    செய்தி முன்னோட்டம்

    மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், முதலமைச்சரின் செயலாளருமான ஸ்மிதா சபர்வாலின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததற்காக கைது செய்யப்பட்ட துணை தாசில்தாரை தெலுங்கானா அரசு இன்று(ஜன 23) பதவி நீக்கம் செய்தது.

    துணை தாசில்தாரை சஸ்பெண்ட் செய்து மேட்சல் மல்காஜ்கிரி மாவட்ட ஆட்சியர் இன்று உத்தரவு பிறப்பித்தார்.

    தற்போது சஞ்சல்குடா மத்திய சிறையில் துணை தாசில்தார் ஆனந்தகுமார் ரெட்டி(48) அடைக்கப்பட்டிருக்கிறார்.

    வருவாய்த் துறை அதிகாரிகள் இந்த உத்தரவை செயல்படுத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    இந்த சம்பவம் ஜனவரி 19 இரவு நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் நேற்று தான் இது வெளிச்சத்திற்கு வந்தது.

    தெலுங்கானா முதல்வரின் செயலாளரான ஸ்மிதா, ஜூப்ளி ஹில்ஸில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் குடியிருப்பில் ஒரு வில்லாவில் வசித்து வருகிறார்.

    ஐஏஎஸ்

    ஜனவரி 19 அன்று நடந்த சம்பவத்தின் விவரங்கள்

    சம்பவத்தின் போது, துணை தாசில்தார் ஆனந்தகுமார் ரெட்டி அத்துமீறி ஸ்மிதாவின் வீட்டிற்குள் இரவு 11.30 மணியளவில் நுழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    தன் வீட்டிற்குள் திடீரென ஒரு ஆளை பார்த்ததும் ஸ்மிதா பாதுகாப்பு அதிகாரிகளை வர சொல்லி சத்தம் கொடுத்திருக்கிறார். அங்கு வந்த பாதுகாப்பு அதிகாரிகள் ஆனந்தகுமாரை மடக்கி பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அவர் மீது அத்துமீறி நுழைந்ததற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அவர்கள் வீட்டின் வெளியே காரில் காத்திருந்த ஆனந்த்குமார் ரெட்டியின் நண்பர் கே.பாபுவையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    ஆனந்த் ரெட்டி மற்றும் பாபு இருவரும் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்நிலையில், இந்த தாசில்தாரை சஸ்பெண்ட் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    இந்திய எல்லைக்கு அருகில் அணை கட்டும் சீனா: செயற்கைகோள் படங்கள் இந்தியா-சீனா மோதல்
    எனக்கு உதவுங்கள்! மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட இந்தியர்கள் உருக்கம் தொழில்நுட்பம்
    மகரவிளக்கு, மண்டல பூஜைகள் நிறைவு - சபரிமலை கோயில் நடை அடைப்பு இந்தியா
    5 மணிநேரத்திற்கு முன்பே கிளம்பி 35 பயணிகளை விட்டு சென்ற விமானம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025