NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நள்ளிரவில் பெண் ஐஏஎஸ் அதிகாரி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த தாசில்தார் சஸ்பெண்ட்
    இந்தியா

    நள்ளிரவில் பெண் ஐஏஎஸ் அதிகாரி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த தாசில்தார் சஸ்பெண்ட்

    நள்ளிரவில் பெண் ஐஏஎஸ் அதிகாரி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த தாசில்தார் சஸ்பெண்ட்
    எழுதியவர் Sindhuja SM
    Jan 24, 2023, 10:33 am 0 நிமிட வாசிப்பு
    நள்ளிரவில் பெண் ஐஏஎஸ் அதிகாரி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த தாசில்தார் சஸ்பெண்ட்
    துணை தாசில்தார் மீது அத்துமீறி நுழைந்ததற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், முதலமைச்சரின் செயலாளருமான ஸ்மிதா சபர்வாலின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததற்காக கைது செய்யப்பட்ட துணை தாசில்தாரை தெலுங்கானா அரசு இன்று(ஜன 23) பதவி நீக்கம் செய்தது. துணை தாசில்தாரை சஸ்பெண்ட் செய்து மேட்சல் மல்காஜ்கிரி மாவட்ட ஆட்சியர் இன்று உத்தரவு பிறப்பித்தார். தற்போது சஞ்சல்குடா மத்திய சிறையில் துணை தாசில்தார் ஆனந்தகுமார் ரெட்டி(48) அடைக்கப்பட்டிருக்கிறார். வருவாய்த் துறை அதிகாரிகள் இந்த உத்தரவை செயல்படுத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் ஜனவரி 19 இரவு நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் நேற்று தான் இது வெளிச்சத்திற்கு வந்தது. தெலுங்கானா முதல்வரின் செயலாளரான ஸ்மிதா, ஜூப்ளி ஹில்ஸில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் குடியிருப்பில் ஒரு வில்லாவில் வசித்து வருகிறார்.

    ஜனவரி 19 அன்று நடந்த சம்பவத்தின் விவரங்கள்

    சம்பவத்தின் போது, துணை தாசில்தார் ஆனந்தகுமார் ரெட்டி அத்துமீறி ஸ்மிதாவின் வீட்டிற்குள் இரவு 11.30 மணியளவில் நுழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தன் வீட்டிற்குள் திடீரென ஒரு ஆளை பார்த்ததும் ஸ்மிதா பாதுகாப்பு அதிகாரிகளை வர சொல்லி சத்தம் கொடுத்திருக்கிறார். அங்கு வந்த பாதுகாப்பு அதிகாரிகள் ஆனந்தகுமாரை மடக்கி பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அவர் மீது அத்துமீறி நுழைந்ததற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வீட்டின் வெளியே காரில் காத்திருந்த ஆனந்த்குமார் ரெட்டியின் நண்பர் கே.பாபுவையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ஆனந்த் ரெட்டி மற்றும் பாபு இருவரும் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த தாசில்தாரை சஸ்பெண்ட் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : புதிய கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் கொடி நாட்டுமா பஞ்சாப் கிங்ஸ்? ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : தோனியின் கடைசி சீசன்! மீண்டெழுமா சென்னை சூப்பர் கிங்ஸ்! சென்னை சூப்பர் கிங்ஸ்
    உலகம் முழுவதிலும், மனிதனால் உருவாக்கப்பட்ட, பிரமிப்பூட்டும் பாலங்கள் சில! சுற்றுலா

    இந்தியா

    உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் : இரண்டாவது பதக்கத்தை வென்ற ருத்ராங்க்ஷ் பாட்டீல் உலக கோப்பை
    எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு ராகுல் காந்தி கூறிய பதில் ராகுல் காந்தி
    சென்னையில் ஜி20 நிதித்துறை சார்ந்த கருத்தியல் மாநாடு சென்னை
    லண்டனில் உள்ள இந்திய தூதரக பிரச்சனை: டெல்லி காவல்துறை வழக்கு பதிவு டெல்லி

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023