ரூ.84,000 லஞ்சம் வாங்கிய தெலுங்கானா அதிகாரி பிடிபட்டவுடன் கதறி அழுததால் வைரல்
ரூ.84,000 லஞ்சம் வாங்கியதற்காக கையும் களவுமாக பிடிபட்ட தெலுங்கானா பழங்குடியினர் நலப் பொறியியல் துறையைச் சேர்ந்த செயல் பொறியாளர் நேற்று லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஹைதராபாத் மாசப் டேங்க் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஏற்கனேவே அனுமதி வழங்கப்பட்ட அரசாங்க கடமையை செய்வதற்கு கே ஜக ஜோதி என்ற அதிகாரி, போடுகார் கங்கண்ணா என்ற ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் கேட்டிருக்கிறார். அந்த ஒப்பந்ததாரர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துவிட்டார். அந்த புகாரை பெற்றுக்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி லஞ்சமாக பணம் வாங்கிய ஜோதியை பிடித்தனர். பிடிபட்டவுடன் அவர் கதறி அழ தொடங்கி இருக்கிறார். அந்த சம்பவத்தின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.