Page Loader
ரம்ஜான் காலத்தில் முஸ்லீம் ஊழியர்கள் ஒரு மணிநேரம் முன்னதாக கிளம்ப தெலுங்கானா மாநில அரசு அனுமதி
ரம்ஜான் காலத்தில் முஸ்லீம் ஊழியர்கள் ஒரு மணிநேரம் முன்னதாக கிளம்ப தெலுங்கானாவில் அனுமதி

ரம்ஜான் காலத்தில் முஸ்லீம் ஊழியர்கள் ஒரு மணிநேரம் முன்னதாக கிளம்ப தெலுங்கானா மாநில அரசு அனுமதி

எழுதியவர் Sekar Chinnappan
Feb 17, 2025
07:18 pm

செய்தி முன்னோட்டம்

தெலுங்கானா அரசு, புனித ரம்ஜான் மாதத்தில், மாநிலத்தில் உள்ள அனைத்து முஸ்லீம் ஊழியர்களும் ஒரு மணி நேரம் முன்னதாகவே வேலையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மாநில அரசின் பொது நிர்வாகத் துறை இதுகுறித்து பிறப்பித்த உத்தரவின்படி, மார்ச் 2 முதல் மார்ச் 31, 2025 வரை மாலை 4 மணிக்கு அலுவலகங்களை விட்டு வெளியேறலாம். தலைமைச் செயலாளர் சாந்தி குமாரி கையொப்பமிட்ட இந்த உத்தரவு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஒப்பந்த மற்றும் அவுட்சோர்சிங் ஊழியர்கள், வாரியங்கள், நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள முஸ்லீம் ஊழியர்களுக்கு பொருந்தும். ரம்ஜான் மாதத்தில் முஸ்லீம்கள் தங்கள் பிரார்த்தனைகளைச் செய்ய இந்த தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

விடுமுறை

விடுமுறை நாட்கள்

தெலுங்கானா அரசு அலுவலகங்கள் ஒவ்வொரு மாதமும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் இரண்டாவது சனிக்கிழமைகளில் மூடப்படும். இந்நிலையில், பிறை பார்ப்பதன் அடிப்படையில், ஈத்-உல்-பித்ர், ஈத்-உல்-அதா, முஹர்ரம் மற்றும் ஈத்-இ-மிலாத் போன்ற இஸ்லாமிய விடுமுறை நாட்களில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் அறிவிக்கப்படும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, ரம்ஜான் மாதத்தில் முஸ்லீம் ஊழியர்களுக்கு நெகிழ்வான வேலை நேரங்களை வழங்குவதன் மூலம் தங்கள் மத கடமைகளை மேற்கொள்வதற்கு இடமளிக்கும் மாநில பாரம்பரியத்தைத் தொடர்கிறது. இந்த தளர்வுகள் வழங்கப்பட்டாலும், அவசரநிலை ஏற்பட்டால் ஊழியர்கள் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.