NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழ்நாடு முன்னாள் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா உடல்நல குறைவால் காலமானார் 
    தமிழ்நாடு முன்னாள் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா உடல்நல குறைவால் காலமானார் 
    1/2
    இந்தியா 0 நிமிட வாசிப்பு

    தமிழ்நாடு முன்னாள் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா உடல்நல குறைவால் காலமானார் 

    எழுதியவர் Nivetha P
    Apr 12, 2023
    11:38 am
    தமிழ்நாடு முன்னாள் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா உடல்நல குறைவால் காலமானார் 
    தமிழ்நாடு முன்னாள் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா உடல்நல குறைவால் காலமானார்

    உத்தரப்பிரதேசம், லக்னோவை சேர்ந்தவர் நரேஷ் குப்தா, இவர் 1973ல் ஐ.ஏ.எஸ். அதிகாரியானார். தமிழ்நாட்டில் உள்ள ராமநாதபுர மாவட்டம் பிரிக்கப்பட்டு சிவகங்கை மாவட்டம் 1984ல் தனியாக அமைக்கப்பட்டது. அதன் பின்னர் 1985ம் ஆண்டு முதல் சிவகங்கை மாவட்டம் தனி மாவட்டமாக செயல்பட துவங்கியது. இதன் முதல் ஆட்சியராக பொறுப்பேற்றார் நரேஷ் குப்தா. அதனை தொடர்ந்து அவர் ஆளுநரின் செயலாளர், உள்துறை செயலாளர் போன்ற முக்கிய பொறுப்புகளை வகித்தார். தொடர்ந்து அவர் 1998ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரையும், 2005ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரையிலும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றினார். 2009ம் ஆண்டு இவர் முதன்முறையாக வெப் கேமரா மூலம் வாக்குப்பதிவினை கண்காணிக்கும் முறையினை அறிமுகம் செய்தார் என்பது குறிப்பிடவேண்டியவை.

    2/2

    உடல்நல குறைவால் நேற்று(ஏப்ரல்.,10) காலமானார் 

    கிட்டத்தட்ட தமிழகத்தில் 8 ஆண்டுகள் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த இவர், நியாயமாக, நேர்மையாக, சுதந்திரமாக தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் நாட்டம் கொண்டு பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டார். தன்னுடைய பணிக்காலத்தின்போது, அதாவது 20ஆண்டுகளுக்கு முன்னரே தற்போதைய அதிநவீன தேர்தல் முறைகளுக்கு அடித்தளமிட்டவர் இவர் என்று கூறலாம். கடந்த 2010ம்ஆண்டு தனது பணியில் இருந்து ஓய்வுப்பெற்ற இவர், சென்னை அண்ணா நகரில் வசித்து வந்தார். இந்நிலையில் இவருக்கு கடந்த 5ம்தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து 73வயதான நரேஷ் குப்தா சிகிச்சை பலனின்றி நேற்று(ஏப்ரல்.,10) மாலை காலமானார். நரேஷ் குப்தாவின் மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தேர்தல்
    உத்தரப்பிரதேசம்
    தேர்தல் ஆணையம்

    தேர்தல்

    கர்நாடக தேர்தல் - பிரச்சாரத்தில் களமிறங்கும் ராகுல் காந்தி ராகுல் காந்தி
    ராகுல் காந்தி விவகாரம்; இடைதேர்தலை நடத்த அவசரம் இல்லை: தேர்தல் ஆணையம் இந்தியா
    கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிப்பு இந்தியா
    நாகாலாந்தின் முதல் பெண் எம்எல்ஏ: வரலாறு படைத்தார் ஹெகானி ஜகாலு இந்தியா

    உத்தரப்பிரதேசம்

    பக்கத்து வீட்டு வாசலில் தொங்கி கொண்டிருந்த 2 வயது சிறுமியின் உடல் இந்தியா
    உத்திரபிரதேசத்தில் மாலில் பெண் ஊழியரை பாலியல் வன்புணர்வு செய்த செக்யூரிட்டி இந்தியா
    உத்திரபிரதேசத்தில் கள்ள காதலனுக்காக தன் இரு குழந்தைகளை கொன்ற தாய் கைது காவல்துறை
    உத்தரப்பிரேதேசத்தில் சொத்திற்காக கணவன், இரு மகன்களை கொன்ற பெண் - அதிர்ச்சி தகவல் இந்தியா

    தேர்தல் ஆணையம்

    தேசிய கட்சி என்னும் அந்தஸ்த்தை இழந்த இந்திய கம்யூனிஸ்ட் இந்தியா
    ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பிற்கான கால அவகாச நீட்டிப்பு குறித்து தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் தமிழ்நாடு
    தேர்தல் ஆணையர் நியமனத்தில் புது நடைமுறை - உச்சநீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    ஈரோடு இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம் ஈரோடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023