NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழ் அறிஞர்கள் விருது - தகுதியானோரை அழைக்கிறது தமிழக அரசு
    தமிழ் அறிஞர்கள் விருது - தகுதியானோரை அழைக்கிறது தமிழக அரசு
    இந்தியா

    தமிழ் அறிஞர்கள் விருது - தகுதியானோரை அழைக்கிறது தமிழக அரசு

    எழுதியவர் Nivetha P
    August 29, 2023 | 01:32 pm 1 நிமிட வாசிப்பு
    தமிழ் அறிஞர்கள் விருது - தகுதியானோரை அழைக்கிறது தமிழக அரசு
    தமிழ் அறிஞர்கள் விருது - தகுதியானோரை அழைக்கிறது தமிழக அரசு

    தமிழ்நாடு அரசு தமிழ்மொழிக்கும், பண்பாட்டு வளர்ச்சிக்கும் தொண்டு செய்வோருக்கு ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகிறது. அதன்படி, 2024ம் ஆண்டின் திருவள்ளுவர் விருது மற்றும் 2023ம் ஆண்டின் 74 தகுதியான அறிஞர்கள் விருதுக்கும் தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று தமிழக அரசு செய்தி குறிப்பினை வெளியிட்டுள்ளது. அதில், திருவள்ளுவர் நாள் விருதுகள் அடிப்படையின் கீழ், பாரதியார் விருது, திருவள்ளுவர் விருது, பாரதிதாசன் விருது, திருவிக விருது, காமராஜர் விருது, அண்ணா விருது, கி.ஆ.பெ.விசுவநாதம் விருது உள்ளிட்ட பிரிவுகளில் விருது பெறுவோருக்கு தலா ரூ.2 லட்சம் ரொக்கம், பொன்னாடை, தகுதியுரை, 1 பவுன் தங்கப்பதக்கம் உள்ளிட்டவை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    இலக்கிய மாமணி பிரிவில் 3 பேருக்கு விருதுகள் 

    இதனைத்தொடர்ந்து இலக்கிய மாமணி பிரிவில் விருது பெறும் 3 பேருக்கு தலா ரூ.5 லட்சம் ரொக்கம், பொன்னாடை, தகுதியுரை, 1 பவுன் தங்கப்பதக்கம் உள்ளிட்டவை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து தமிழ் வளர்ச்சித்துறை அடிப்படையில் அயோத்திதாச பண்டிதர் விருது, மறைமலையடிகளார் விருது, வள்ளலார் விருது, காரைக்கால் அம்மையார் விருது, சிந்தனை சிற்பி சிங்காரவேலர் விருது உள்ளிட்ட விருதுகளை பெறும் அறிஞர்களுக்கு தலா ரூ.2 லட்சம் ரொக்கம், பொன்னாடை, தகுதியுரை, தங்கப்பதக்கம் ஆகியன வழங்கப்படுமாம்.

    தமிழ்த்தாய் விருது பெறும் அறிஞர்களுக்கான பரிசு விவரங்கள் 

    அதேபோல் தமிழ்த்தாய் விருது பெறும் அறிஞர்களுக்கு ரூ.5 லட்சம், 1 கேடயம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும். சி.பா.ஆதித்தனார் விருது பெறும் 3 பேருக்கு கேடயம், ரூ.2 லட்சம், தகுதியுரையுடன் பொன்னாடை வழங்கப்படும். மாவட்டந்தோறும் தலா ஒரு நபர் என்னும் அடிப்படையில் 38 பேருக்கு தமிழக செம்மல் விருது வழங்கப்படுமாம். அவர்களுக்கு ரூ.25 ஆயிரமும், தகுதியுரையும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    விருதுகளுக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்ய இணையதள முகவரி 

    இது போன்று மொத்தம் 75 தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது. இதற்கு தகுதியான அறிஞர்கள் http://awards.tn.gov.in என்னும் இணையதளம் மூலம் அல்லது தமிழ்வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி கழக இயக்ககம், தமிழ்சாலை, எழும்பூர், சென்னை-8 என்னும் முகவரிக்கு செப்டம்பர் 15ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்புமாறு தமிழக அரசு கூறியுள்ளது. உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்கள் அனுப்பப்படவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்களில் அணுகலாம் 

    மேலும் இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்கள் அனைத்தும் மேற்கூறிய இணையத்தில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சந்தேகங்கள் இருந்தால் அறிந்துகொள்ளலாம் என்றும் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 044 - 28190412, 28190413 உள்ளிட்ட தொலைபேசி எண்களை அணுகி, அலுவலக நேரத்தில் தொடர்பு கொண்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழக அரசு
    தமிழ்நாடு
    விருது

    தமிழக அரசு

    தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை - ஒரு அட்டைக்கு 50 பைசா வீதம் வழங்கப்படும் தமிழ்நாடு
    கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் - விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணி தீவிரம் மு.க ஸ்டாலின்
    11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி ஆண்டுக்கு இரண்டு முறை பொது தேர்வு: மத்திய அரசு  இந்தியா
    டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்திற்கான கோப்புகளை திருப்பியனுப்பிய தமிழக ஆளுநர்  ஆர்.என்.ரவி

    தமிழ்நாடு

    பரனூர் சுங்கச்சாவடியில் நவீன ஊழல் - சிஏஜி அறிக்கை மூலம் அம்பலம் மத்திய அரசு
    ஓணம் திருநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் பேசி வீடியோ வெளியீடு மு.க ஸ்டாலின்
    அரசு விரைவு பேருந்துகளை சாலையோர உணவகங்களில் நிறுத்துவதற்கான நிபந்தனைகள் எச்சரிக்கை
    9 தமிழக மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு  புதுச்சேரி

    விருது

    மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி விருது 2022 - முதலிடம் பிடித்த கோவை  கோவை
    'ஆதனின் பொம்மை' நாவலினை எழுதியவருக்கு சாகித்ய பால புரஸ்கார் விருது  தூத்துக்குடி
    வீர சாகசம் மற்றும் துணிவு செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023