NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழ் அறிஞர்கள் விருது - தகுதியானோரை அழைக்கிறது தமிழக அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழ் அறிஞர்கள் விருது - தகுதியானோரை அழைக்கிறது தமிழக அரசு
    தமிழ் அறிஞர்கள் விருது - தகுதியானோரை அழைக்கிறது தமிழக அரசு

    தமிழ் அறிஞர்கள் விருது - தகுதியானோரை அழைக்கிறது தமிழக அரசு

    எழுதியவர் Nivetha P
    Aug 29, 2023
    01:32 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு அரசு தமிழ்மொழிக்கும், பண்பாட்டு வளர்ச்சிக்கும் தொண்டு செய்வோருக்கு ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகிறது.

    அதன்படி, 2024ம் ஆண்டின் திருவள்ளுவர் விருது மற்றும் 2023ம் ஆண்டின் 74 தகுதியான அறிஞர்கள் விருதுக்கும் தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று தமிழக அரசு செய்தி குறிப்பினை வெளியிட்டுள்ளது.

    அதில், திருவள்ளுவர் நாள் விருதுகள் அடிப்படையின் கீழ், பாரதியார் விருது, திருவள்ளுவர் விருது, பாரதிதாசன் விருது, திருவிக விருது, காமராஜர் விருது, அண்ணா விருது, கி.ஆ.பெ.விசுவநாதம் விருது உள்ளிட்ட பிரிவுகளில் விருது பெறுவோருக்கு தலா ரூ.2 லட்சம் ரொக்கம், பொன்னாடை, தகுதியுரை, 1 பவுன் தங்கப்பதக்கம் உள்ளிட்டவை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    விருதுகள் 

    இலக்கிய மாமணி பிரிவில் 3 பேருக்கு விருதுகள் 

    இதனைத்தொடர்ந்து இலக்கிய மாமணி பிரிவில் விருது பெறும் 3 பேருக்கு தலா ரூ.5 லட்சம் ரொக்கம், பொன்னாடை, தகுதியுரை, 1 பவுன் தங்கப்பதக்கம் உள்ளிட்டவை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதனையடுத்து தமிழ் வளர்ச்சித்துறை அடிப்படையில் அயோத்திதாச பண்டிதர் விருது, மறைமலையடிகளார் விருது, வள்ளலார் விருது, காரைக்கால் அம்மையார் விருது, சிந்தனை சிற்பி சிங்காரவேலர் விருது உள்ளிட்ட விருதுகளை பெறும் அறிஞர்களுக்கு தலா ரூ.2 லட்சம் ரொக்கம், பொன்னாடை, தகுதியுரை, தங்கப்பதக்கம் ஆகியன வழங்கப்படுமாம்.

    விருது 

    தமிழ்த்தாய் விருது பெறும் அறிஞர்களுக்கான பரிசு விவரங்கள் 

    அதேபோல் தமிழ்த்தாய் விருது பெறும் அறிஞர்களுக்கு ரூ.5 லட்சம், 1 கேடயம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும். சி.பா.ஆதித்தனார் விருது பெறும் 3 பேருக்கு கேடயம், ரூ.2 லட்சம், தகுதியுரையுடன் பொன்னாடை வழங்கப்படும்.

    மாவட்டந்தோறும் தலா ஒரு நபர் என்னும் அடிப்படையில் 38 பேருக்கு தமிழக செம்மல் விருது வழங்கப்படுமாம்.

    அவர்களுக்கு ரூ.25 ஆயிரமும், தகுதியுரையும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    தமிழ் 

    விருதுகளுக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்ய இணையதள முகவரி 

    இது போன்று மொத்தம் 75 தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது.

    இதற்கு தகுதியான அறிஞர்கள் http://awards.tn.gov.in என்னும் இணையதளம் மூலம் அல்லது தமிழ்வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி கழக இயக்ககம், தமிழ்சாலை, எழும்பூர், சென்னை-8 என்னும் முகவரிக்கு செப்டம்பர் 15ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்புமாறு தமிழக அரசு கூறியுள்ளது.

    உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்கள் அனுப்பப்படவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    விவரம் 

    மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்களில் அணுகலாம் 

    மேலும் இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்கள் அனைத்தும் மேற்கூறிய இணையத்தில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

    அதன் மூலம் விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சந்தேகங்கள் இருந்தால் அறிந்துகொள்ளலாம் என்றும் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 044 - 28190412, 28190413 உள்ளிட்ட தொலைபேசி எண்களை அணுகி, அலுவலக நேரத்தில் தொடர்பு கொண்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக அரசு
    தமிழ்நாடு
    விருது

    சமீபத்திய

    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து
    ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி பாகிஸ்தான்
    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்

    தமிழக அரசு

    இனி சனிக்கிழமைகளிலும் சென்னையில் ஆர்.டி.ஓ அலுவலகங்கள் செயல்படும்  சென்னை
    ஜூலை 24 முதல் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும்: சென்னை மேயர் பிரியா  தமிழ்நாடு
    தான் பயின்ற பள்ளிக்கு ரூ.20 லட்சம் நிதி அளித்தார் சாலமன் பாப்பையா  மதுரை
    2024 பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை வழங்க ரூ.200 கோடி ஒதுக்கீடு  தமிழ்நாடு

    தமிழ்நாடு

    5 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு  புதுச்சேரி
    ஆகஸ்ட் 16 முதல் சென்னையில் சர்வதேச கோல்ஃப் ப்ரோ சாம்பியன்ஷிப் போட்டி இந்தியா
    நீட் தேர்வு - ஆகஸ்ட் 20ம் தேதி தமிழ்நாடு முழுவதும் திமுக உண்ணாவிரத போராட்டம்  நீட் தேர்வு

    விருது

    வீர சாகசம் மற்றும் துணிவு செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு
    'ஆதனின் பொம்மை' நாவலினை எழுதியவருக்கு சாகித்ய பால புரஸ்கார் விருது  தூத்துக்குடி
    மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி விருது 2022 - முதலிடம் பிடித்த கோவை  கோவை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025