Loading...
3 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்! வானிலை முன்னறிவிப்பு; வெளியான முழு விவரம்
3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

3 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்! வானிலை முன்னறிவிப்பு; வெளியான முழு விவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 07, 2026
06:27 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் முதல் கேரளா வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை, தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் மழை பெய்யும் சமயங்களில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மலைப் பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மழைக்கான காரணம்

மழைக்கான பின்னணி மற்றும் வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி

தற்போது நிலவும் மழை சூழலுக்குக் காரணமாக இரண்டு முக்கிய வளிமண்டல அமைப்புகளை வானிலை ஆய்வு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

சுமார் 5.8 கிமீ உயரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் முதல் வடக்கு கடலோர கேரளா வரை ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.

அதேபோல, வட தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்திலும் மற்றொரு வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது.

இந்த இரண்டு சாதகமான வானிலை அமைப்புகளின் காரணமாகவே மாநிலத்தின் பல பகுதிகளில் மேகமூட்டம் அதிகரித்து தொடர் மழை பெய்து வருகிறது.

7 நாட்கள்

அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்த மாவட்டங்களில் நாளை இடியுடன் கூடிய மிதமான மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் 9 முதல் 12 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதன்பின்னர் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வாக்கில் வட கடலோரத் தமிழகப் பகுதிகள் மற்றும் மலை மாவட்டங்களில் மிதமான மழையும், பிற மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

ADVERTISEMENT

சென்னை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை விவரம்

தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நகரின் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

வங்கக்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் குறிப்பிட்ட கடற்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT