NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள்
    ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க இன்றே கடைசி நாள்

    தமிழகத்தில் மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள்

    எழுதியவர் Nivetha P
    Jan 31, 2023
    03:09 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.

    அதன்படி, நவம்பர் 15ம் தேதி முதல் 2,811 மின் பிரிவு அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு இதற்கான பணி துவங்கப்பட்டது.

    இந்த இணைப்பிற்கான கடைசி நாள் டிசம்பர் 31ம் தேதி என்று அறிவிக்கப்பட்டது.

    அதன் பின்னர், பலன் நுகர்வோர் ஆதார் எண்ணை இணைக்காமல் இருந்த காரணத்தினால் இதற்கான கால அவகாசத்தை ஜனவரி 31ம் தேதி வரை நீட்டித்து மின்வாரியம் உத்தரவிட்டது.

    இதனை தொடர்ந்து நேற்று(ஜன.,30) வரை 2.34 கோடி மின் நுகர்வோர் தங்கள் ஆதார் எண்ணை மின்இணைப்பு எண்ணுடன் இணைத்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஓர் அறிவிப்பினை தெரிவித்துள்ளார்.

    அபராதம் விதிப்பு

    மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்படக்கூடும்

    மேலும், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள் என்னும் பட்சத்தில், இதற்கான கால அவகாசம் மேல்கொண்டு நீட்டிக்கப்படாது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

    எனவே, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் உடனே இணைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

    அவ்வாறு இணைக்க தவறும் பட்சத்தில், அந்த குறிப்பிட்ட மின் நுகர்வோர் மின் கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது.

    இதனால் மின் கணக்கெடுப்பு எடுத்து 20 நாட்களுக்குள் கட்டணம் செலுத்த முடியாமல் அதற்கான அபராதத்தையும் செலுத்த நேரிடும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

    இதனை தொடர்ந்து மின் இணைப்பு துண்டிக்கப்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    தமிழ்நாடு

    தை 2: திருவள்ளுவர் தினமும், அதன் வரலாறும் பொங்கல் திருநாள்
    இதய ஆரோக்கியம் முதல் கர்ப்பிணிகள் வரை: ஜவ்வரிசியில் உள்ள நன்மைகள் ஆரோக்கியமான உணவு
    இந்திய பணக்காரர்களில் 1% நபர்களிடம், நாட்டின் 40% சொத்து உள்ளது: ஆக்ஸ்ஃபேம் கவலை! இந்தியா
    காணும் பொங்கல்: சுற்றுலா தளங்களில் குவியும் பொதுமக்கள் பொங்கல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025