NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா?
    சென்னையைப் புரட்டிப்போட்ட மாண்டஸ் புயல்

    புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா?

    எழுதியவர் Sindhuja SM
    Dec 12, 2022
    07:44 pm

    செய்தி முன்னோட்டம்

    இதோ அதோ என்று நம்மிடம் போக்குக் காட்டிக்கொண்டிருந்த மாண்டஸ் புயல் ஒருவழியாகக் கரையைக் கண்டந்துவிட்டது. இருந்தாலும், இன்னும் 2 நாட்களுக்கு காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று இரவு 10 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்க தொடங்கியதாகவும் சுமார் 5 மணிநேரத்திற்கு பிறகு 3 மணியளவில் இந்த புயல் முழுமையாக கரையைக் கடந்ததாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மாண்டஸ் புயல் கரையைக் கடந்த போது கடலோர பகுதிகளில் மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.

    இதனால், சென்னையிலும் புதுச்சேரியிலும் பெரும் சேதங்களும் இழப்புகளும் ஏற்பட்டுள்ளது.

    சேதம்

    புயலால் அடைந்த சேதங்கள்

    புயலால் சென்னையில் மட்டும் சுமார் 400 மரங்கள் சாய்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விழுந்த மரங்களை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    சென்னையில் எந்த பகுதியிலும் மழை நீர் தேங்கவில்லை என்றும் கட்டப்பட்ட 16 சுரங்கப்பாதைகளும் நன்றாக இயங்கி கொண்டிருக்கிறது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருக்கிறார்.

    இந்த புயலின் காரணமாக சென்னையில் அறுந்து விழுந்த மின்சார கம்பியை மிதித்ததால் இருவர் உயிரிழந்துள்ளனர். இதே போல் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

    புயல் கரையைக் கடந்துவிட்டாலும் தமிழகத்தின் பல இடங்களில் மழையும் பலத்த காற்றும் இன்னும் இரண்டு நாளுக்கு தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஐபிஎல்லில் தனது 5வது சதத்தை கே.எல். ராகுல் அடித்தார்: முக்கிய புள்ளிவிவரங்கள் கே.எல்.ராகுல்
    ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சதியா? ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் கைது  ஹைதராபாத்
    சென்னையில் அதிகாலை முதல் மிதமழை; தமிழகத்தில் இன்று கனமழை எச்சரிக்கை எங்கே? தமிழகம்
    தீவிரமான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் ஜோ பைடன்

    தமிழ்நாடு

    தமிழகத்தை உலுக்கும் மாண்டஸ் புயல்! வெதர்மேன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025