NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இறப்பதற்கு முன் 20 குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய வேன் டிரைவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இறப்பதற்கு முன் 20 குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய வேன் டிரைவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு

    இறப்பதற்கு முன் 20 குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய வேன் டிரைவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு

    எழுதியவர் Sindhuja SM
    Jul 26, 2024
    06:36 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் 49 வயதான பள்ளி வேன் டிரைவர் ஒருவர் சாலையோரம் பாதுகாப்பாக வாகனத்தை நிறுத்தி சுமார் 20 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றி உள்ளார்.

    வண்டியை நிறுத்திய சில நிமிடங்களில் அவர் மாரடைப்பால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அந்த ஓட்டுநரின் துணிச்சலான செயலை தமிழகமே பாராட்டி வருகிறது.

    மேலும், பள்ளிக் குழந்தைகள் இருக்கும் ஒரு பேருந்தில் ஓட்டுநர் மலையப்பன் சுயநினைவின்றி அமர்ந்திருக்கும் படம் சமூக வலைதளமான X-ல் வைரலாகி வருகிறது.

    ஜூலை 24 புதன்கிழமை அன்று, வெள்ளக்கோவில் ஏஎன்வி மெட்ரிக் பள்ளி மாணவர்களை அவர்களது வீடுகளில் விடுவதற்காக மலையப்பன் பேருந்தில் அழைத்துச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்தது.

    தமிழகம் 

    மலையப்பன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு

    அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, அவர் மிகவும் சிரமப்பட்டு வாகனத்தை சாலையோரமாக நிறுத்தினார்.

    அதே பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து வந்த அவரது மனைவியும், சம்பவத்தின் போது அதே வேனில் தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இறக்கும் தருவாயிலும் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய அந்த ஓட்டுநரின் வீரச் செயலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பலர் பாராட்டியுள்ளனர்.

    "தனது உயிருக்கு ஆபத்து இருந்தபோதிலும், பள்ளி மாணவர்களின் விலைமதிப்பற்ற உயிரைக் காப்பாற்றி இருக்கிறார். அவரது கடமை உணர்வு மற்றும் சுய தியாகத்திற்காக அவரை வணங்குகிறோம். அவர் தனது மனிதாபிமான செயலின் மூலம் தொடர்ந்து வாழ்வார்" என்று ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    மேலும், மலையப்பன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழகம்
    திருப்பூர்

    சமீபத்திய

    2005 பெங்களூரு, 2006 நாக்பூர் தாக்குதல்கள் உட்பட இந்தியாவின் 3 பெரிய தாக்குதல்களுக்குக் காரணமான லஷ்கர் பயங்கரவாதி கொலை லஷ்கர்-இ-தொய்பா
    சாப்ட்வேர் என்ஜினீயர்களின் ஊதிய ஆதிக்கம் நீடிக்காது என்று எச்சரிக்கும் ஜோஹோவின் ஸ்ரீதர் வேம்பு செயற்கை நுண்ணறிவு
    அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது: IMD  வானிலை ஆய்வு மையம்
    இயக்குனர் மணிரத்னம்- தெலுங்கு நடிகர் நவீன் பாலிஷெட்டி காதல் கதைக்காக இணைகிறார்களா?  இயக்குனர் மணிரத்னம்

    தமிழகம்

    விக்கிரவாண்டி தேர்தலுக்காக முன்கூட்டியே முடிக்கப்படும் சட்டசபை கூட்டம் சட்டப்பேரவை
    தமிழக மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு  புதுச்சேரி
    தமிழக மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு  புதுச்சேரி
    சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையேயான ரயில் சேவைகளில் புதிய மாற்றங்கள் அறிவிப்பு  சென்னை

    திருப்பூர்

    திருமணத்துக்கு வற்புறுத்தல்: காதலியை உயிரோடு தீ வைத்து கொளுத்திய காதலன் தமிழ்நாடு
    திருப்பூரில் வாடகை வீடு எடுத்து கள்ளநோட்டு அச்சடிப்பு-வனத்துறை அதிகாரியாக நடித்தவர் கைது காவல்துறை
    திருப்பூரில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பினை உறுதிப்படுத்த கோரிக்கை சமூக வலைத்தளம்
    வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறுவது ஹோலி பண்டிகைக்காக, வேறு பிரச்சனை இல்லை தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025