NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ரூ1.கோடி வரை கடன்; முன்னாள் ராணுவத்தினருக்கான காக்கும் கரங்கள் திட்டத்தில் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரூ1.கோடி வரை கடன்; முன்னாள் ராணுவத்தினருக்கான காக்கும் கரங்கள் திட்டத்தில் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு
    முன்னாள் ராணுவத்தினருக்கான காக்கும் கரங்கள் திட்டத்தில் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு

    ரூ1.கோடி வரை கடன்; முன்னாள் ராணுவத்தினருக்கான காக்கும் கரங்கள் திட்டத்தில் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 17, 2025
    01:28 pm

    செய்தி முன்னோட்டம்

    முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உதவும் வகையில் காக்கும் கரங்கள் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    கடந்த 2024 சுதந்திர தினத்தன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

    இந்த திட்டம் சொந்தமாக தொழில் தொடங்க விரும்புவோருக்கு நிதி உதவி மற்றும் பயிற்சி அளிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்தத் திட்டத்தின் கீழ், முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்குவதற்கு ₹1 கோடி வரை கடன் பெறலாம்.

    இந்தத் திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் வணிகங்களுக்கு அரசாங்கம் 30% மூலதன மானியம் மற்றும் 3% வட்டி மானியம் வழங்கும்.

    கூடுதலாக, பயனாளிகள் தங்கள் தொழில் முனைவோர் பயிற்சியையும் பெறுவார்கள். பணியின் போது உயிரிழந்த படைவீரர்களின் குடும்பங்களும் இந்தத் திட்டத்திற்குத் தகுதியுடையவர்கள் ஆவர்.

    விண்ணப்பம்

    விண்ணப்பிப்பது எப்படி?

    தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.exwel.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது அந்தந்த மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகங்களுக்குச் சென்று உதவி பெறலாம்.

    55 வயதுக்குட்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள், திருமணமாகாத அல்லது முன்னாள் ராணுவ வீரர்களின் விதவை மகள்கள், கடமையில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் விதவை மனைவிகள் இந்த திட்டத்திற்கு தகுதி உடையவர்கள் ஆவர்.

    விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, முன்னாள் ராணுவ வீரருக்கான அடையாள அட்டை, சேவை சான்றிதழ், கல்வி சான்றிதழ்கள் மற்றும் வங்கி பாஸ்புக் உள்ளிட்ட அத்தியாவசிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பங்களை ஆன்லைனில் அல்லது நேரில் சமர்ப்பிக்கலாம். திட்டத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 20, 2025 ஆகும்.

    ட்விட்டர் அஞ்சல்

    தமிழக அரசின் அறிவிப்பு

    முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/nnQrQNuZQB

    — TN DIPR (@TNDIPRNEWS) February 17, 2025
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக அரசு
    தமிழக முதல்வர்
    மு.க.ஸ்டாலின்
    இந்திய ராணுவம்

    சமீபத்திய

    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    தமிழக அரசு

    தமிழக கோவில்களில் கோடிக்கணக்கில் கொள்ளை: அதிர்ச்சி ஏற்படுத்தும் ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கோவில்கள்
    ஃபெஞ்சல் புயல் பாதிப்பு; தமிழகத்திற்கு முதற்கட்டமாக ₹944.8 கோடி பேரிடர் மீட்பு நிதியை வழங்கியது மத்திய அரசு மத்திய அரசு
    உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு ரூ.5 கோடி ரொக்கப் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு டி.குகேஷ்
    உலக கோப்பையுடன் சென்னை திரும்பிய செஸ் சாம்பியன் குகேஷ்; தமிழக அரசு சார்பில் வரவேற்பு டி.குகேஷ்

    தமிழக முதல்வர்

    தமிழக அமைச்சரவையில் மாற்றமா?உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பா? தமிழக அரசு
    இன்று முதல் தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்காது பேருந்துகள்
    மின்கட்டண உயர்வு உங்களை பாதிக்குமா? தெரிந்து கொள்ளுங்கள் மின்சார வாரியம்
    முதல்வர் ஸ்டாலினே தேர்வு செய்த தமிழகத்தின் புதிய உள்துறை செயலாளர் தீரஜ் குமார் IAS  உள்துறை

    மு.க.ஸ்டாலின்

    அமெரிக்க தமிழர்கள் ஆண்டிற்கு ஒருமுறையாவது தமிழகம் வரவேண்டும்; முதல்வர் ஸ்டாலின் அழைப்பு அமெரிக்கா
    முதல்வருக்கு சிகாகோவில் கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது; எக்ஸ் தளத்தில் விஜய் சேதுபதி பதிவு விஜய் சேதுபதி
    கோவை கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டுவதற்கு டெண்டர் அறிவிப்பு கோவை
    3 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு: கார் உற்பத்தியை தொடங்கப்போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு ஃபோர்டு

    இந்திய ராணுவம்

    திருமணம் செய்து கொண்டதால் பணிநீக்கம் செய்யப்பட்ட இராணுவ செவிலியருக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு  உச்ச நீதிமன்றம்
    STEAG: புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த இராணுவத்தில் சிறப்பு பிரிவு அறிமுகம்  தொழில்நுட்பம்
    துருப்புக்களை திரும்பப் பெறுவது தொடர்பாக இந்தியாவுடனான ஒப்பந்தத்தை வெளியிட முடியாது: மாலத்தீவுகள் மாலத்தீவு
    இந்தியாவில் முதன்முறையாக இலகுவான புல்லட்-ப்ரூஃப் ஜாக்கெட்டை உருவாகியுள்ளது DRDO  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025