தமிழக மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கும் அபாயம் - சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை
தமிழ்நாடு மாநிலத்தில் ஏற்கனவே 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கவுள்ள நிலையில், மேலும் சில மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரமும் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில் தமிழக சுகாதாரத்துறை சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவுசெய்து அறிவிப்பினை தெரிவித்துள்ளது. அதன்படி,அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகைப்பதிவு சாதனங்கள் பொருத்தப்பட்டு உரிய பணிநேரத்தில் அனைவரும் வருவதை உறுதி செய்தல்வேண்டும். இதனை தேசிய மருத்துவ ஆணை கண்காணிக்கும். அதில் தொடர்ந்து 2 நாட்களுக்கு வருகைப்பதிவாகவில்லை என்றால் அதுகுறித்து விளக்கம் கேட்கப்படும். காலி பேராசிரியர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் தேசிய மருத்துவ ஆணையத்தினை அணுகி 500மருத்துவயிடங்களை தக்கவைத்து கொள்ளவேண்டும் என்றும் சுகாதாரத் துறை முடிவுச்செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.