NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கிறிஸ்தவ நிர்வாகியை கண்டித்து இந்து முன்னணியினர் சென்னிமலையில் போராட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கிறிஸ்தவ நிர்வாகியை கண்டித்து இந்து முன்னணியினர் சென்னிமலையில் போராட்டம்
    சென்னிமலை முருகன் கோவில். அருணகிரிநாதரால் கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றப்பட்ட தலம் என்பது குறிப்பிடத்தக்கது.

    கிறிஸ்தவ நிர்வாகியை கண்டித்து இந்து முன்னணியினர் சென்னிமலையில் போராட்டம்

    எழுதியவர் Srinath r
    Oct 15, 2023
    06:53 pm

    செய்தி முன்னோட்டம்

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை, கிறிஸ்தவ மலையாக மாற்றப்படும் என பேசிய கிறிஸ்தவ முன்னணி அமைப்பைச் சேர்ந்த நிர்வாகியை கண்டித்து, சென்னிமலையில் இந்து முன்னணியின் சார்பில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேற்கு தமிழ்நாட்டில் முக்கிய முருகன் கோவில்களில் ஒன்றான சென்னிமலை முருகன் கோவில், அருணகிரிநாதரால் கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றப்பட்ட இடம்.

    மாடுகள் மலையேறி தீர்த்தம் எடுத்து வரும் அதிசயம் என பல்வேறு தனிச்சிறப்புகளால் ஆனது சென்னிமலை முருகன் கோவில்.

    இந்த மலையை கல்வாரி மலையாக மாற்றப்படும் என கிறிஸ்தவ முன்னணி அமைப்பைச் சேர்ந்த ஒருவர் பேசியதற்கு எதிராக, நேற்று பல்லாயிரக்கணக்கானோர் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    2nd card

    சர்ச்சையின் தொடக்கப் புள்ளி எது?

    இந்த சர்ச்சையின் தொடக்கப் புள்ளியாக கிறிஸ்துவ குடும்பத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என கூறப்படுகிறது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு, தனது குடும்பத்தினருடன் ஜெபம் செய்து வந்த ஜான் பீட்டர் என்பவர் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவதாக பிரச்சனை எழுந்தது.

    இந்த பிரச்சனையில் இந்து அமைப்பினரால், செப்டம்பர் 17 ஆம் தேதி ஜான் பீட்டர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    ஜான் பீட்டர் தாக்கப்பட்டதற்கு எதிராக, செப்டம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்தவ முன்னணியினர் நடத்திய போராட்டத்தில் பேசிய ஒருவர், சென்னிமலை கல்வாரி மலையாக மாற்றப்படும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

    இதற்கு எதிராக இந்து முன்னணி தலைமையில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

    3rd card

    சென்னிமலையில் தனிப்பிரிவு காவல்துறையினர் விசாரணை

    ஜான் பீட்டர், தன்னை தாக்கியவர்களை கைது செய்ய கோரி சென்னிமலை காவல் நிலையத்தில் அளித்த புகாரில் இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்நிலையில், கிறிஸ்தவ முன்னணி சார்பில் சென்னிமலை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட கடிதத்தில்,

    "கடந்த 25 ஆம் தேதி நடந்த போராட்டத்தில் எங்கள் அனுமதியின்றி ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார். இதை நாங்கள் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளவில்லை."

    "அப்படி அவர் பேசியதற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" என எழுதப்பட்டிருந்தது.

    இந்த விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ள நிலையில் தனிப்பிரிவு காவல்துறையினர் ரகசிய விசாரணையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    ஈரோடு

    சமீபத்திய

    டி20 உலகக்கோப்பை பரிசுத் தொகையை வீரர்களுக்கு தராமல் இழுத்தடிக்கும் ஓமன் கிரிக்கெட் வாரியம்; பகீர் குற்றச்சாட்டு கிரிக்கெட்
    வெளிப்படையான வக்ஃப் சொத்து மேலாண்மைக்கான UMEED போர்ட்டலை தொடங்கியது மத்திய அரசு வக்ஃப் வாரியம்
    பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரியாம சொல்லிட்டார்; சிம்லா ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளதாக பாகிஸ்தான் விளக்கம் பாகிஸ்தான்
    இந்தியாவில் செயற்கைக்கோள் இன்டர்நெட் சேவைக்கான உரிமம் பெற்றது எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் இன்டர்நெட்

    தமிழ்நாடு

    தெலுங்கானா மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம் துவக்கம்  மு.க ஸ்டாலின்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் இந்தியா
    கர்நாடகத்தை கண்டித்து டெல்டா விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம் அறிவிப்பு போராட்டம்
    14 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி

    ஈரோடு

    ஈரோடு இடைத்தேர்தல்-அதிமுக வேட்பாளருக்கு ஆதரவளித்து அறிக்கை வெளியிட்ட பாஜக மாநில தலைவர் தேர்தல்
    ஈரோடு இடைத்தேர்தல் - வரும் 24ம் தேதி பிரச்சாரத்தில் களமிறங்குகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மு.க.ஸ்டாலின்
    ஈரோடு இடைத்தேர்தல்-5 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல்
    ஈரோடு இடைத்தேர்தல்-டி.சி.கிருஷ்ணனுன்னி முன்னிலையில் பணப்பட்டுவாடா செய்வதற்கான டோக்கன்கள் பறிமுதல் தேர்தல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025