NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு உடனடியாக மகளிர் உரிமைத் தொகை கிடைக்குமா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு உடனடியாக மகளிர் உரிமைத் தொகை கிடைக்குமா?
    ஒவ்வொரு வீட்டிலும் தகுதி உள்ள ஒரு பெண்மணிக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும்.

    புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு உடனடியாக மகளிர் உரிமைத் தொகை கிடைக்குமா?

    எழுதியவர் Sindhuja SM
    Jul 18, 2023
    03:11 pm

    செய்தி முன்னோட்டம்

    திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதாமாதம் உதவித்தொகை வழங்கப்படும் என்று திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில் கூறி இருந்தது.

    அதன் படி, திமுக ஆட்சிக்கு வந்து 2 வருடங்கள் முடிவந்துவிட்ட நிலையில், தற்போது கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செய்லபடுத்த திமுக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    தமிழக அரசு நிர்ணயித்திருக்கும் விதிளின் படி, ஒவ்வொரு வீட்டிலும் தகுதி உள்ள ஒரு பெண்மணிக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும்.

    மேலும், உரிமைத் தொகை வழங்கப்படுவதற்கு முன் ஆண்டு வருமானம் உட்பட பல்வேறு விஷயங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

    ரேஷன் அட்டை வைத்திருக்கும் ஒரு குடும்பத்தில் இருந்து ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு மட்டும் மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட இருக்கிறது.

    பீஜே

    ஒரு நாளுக்கு 500 புதிய ரேஷன் அட்டை விண்ணப்பங்கள்

    இதற்கான விண்ணப்பங்கள் வரும் 20ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன.

    இதனையடுத்து, இதுவரை ரேஷன் அட்டையில் இருந்து பெயரை நீக்காதவர்கள், பெயரை சேர்க்காதவர்கள் என்று பலரும் புதிய ரேஷன் அட்டை பெற விண்ணப்பித்து வருகின்றனர்.

    அரசு வெளியிட்ட தரவுகளின் படி, ஒரு நாளுக்கு 500 புதிய ரேஷன் அட்டை விண்ணப்பங்கள் சமர்பிக்கப்படுகிறதாம்.

    இந்நிலையில், உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் முழுமையாக சமர்ப்பிக்கப்படும் வரை புதிய ரேஷன் அட்டைகளுக்கான விண்ணப்பங்களை பெற வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    எனினும், ரேஷன் அட்டையில் இருந்து பெயரை நீக்குவதற்கான காரணம் ஏற்றுக்கொள்ளும்படி இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக அரசு
    திமுக

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தான் கண்ணில் மண்ணை தூவி பயங்கரவாத தளங்களை இந்தியா எவ்வாறு தாக்கியது? ஆபரேஷன் சிந்தூர்
    இந்தியா-மியான்மர் எல்லையில் பதற்றம்: 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை மணிப்பூர்
    கனடாவின் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இந்திய வம்சாவளி அமைச்சர்கள்! கனடா
    ராஜ் நிதிமோருவுடனான தனது உறவை சமந்தா உறுதி செய்தாரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு சமந்தா ரூத் பிரபு

    தமிழக அரசு

    சென்னையில் 2வது சர்வதேச புத்தக கண்காட்சி - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு  புத்தக கண்காட்சி
    தமிழ்நாடு பாடப்புத்தகங்களில் சீட்டுக்கட்டு கணக்குகள் நீக்கம்  தமிழ்நாடு
    தமிழகத்தில் வேலைவாய்ப்புக்கான பதிவு எண்ணிக்கை 66.70 லட்சம்  தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை

    திமுக

    பாஜக தலைவர் அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு அவதூறு வழக்குப்பதிவு  பாஜக அண்ணாமலை
    திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலுமாக அகற்றப்பட்டது: முதல்வர் ஸ்டாலின்  இந்தியா
    பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு  மத்திய அரசு
    ஓமந்தூரார் மருத்துவமனை தலைமை செயலகமாக மாற்றப்படாது - அமைச்சர் மா.சுப்ரமணியம்  தமிழக அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025