NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 10 மசோதாக்களை திருப்பியனுப்பிய ஆளுநர்; 18ம் தேதி சட்டமன்றத்தை கூட்ட அரசு முடிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    10 மசோதாக்களை திருப்பியனுப்பிய ஆளுநர்; 18ம் தேதி சட்டமன்றத்தை கூட்ட அரசு முடிவு
    10 மசோதாக்களை திருப்பியனுப்பிய தமிழக ஆளுநர்-சட்டமன்றத்தை கூட்ட தமிழக அரசு முடிவு

    10 மசோதாக்களை திருப்பியனுப்பிய ஆளுநர்; 18ம் தேதி சட்டமன்றத்தை கூட்ட அரசு முடிவு

    எழுதியவர் Nivetha P
    Nov 16, 2023
    04:55 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியேற்ற தினத்திலிருந்து தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.

    இதனிடையே தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பும் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால தாமதம் செய்வதாகக்கூறி தமிழக அரசு சார்பில் ஆளுநர் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    அந்த வழக்கின் விசாரணையில், அரசு பணிக்கான 14 காலியிடங்களில் 10 காலியிடங்கள் ஆளுநர் ஒப்புதல் தராத காரணத்தினால் நிரப்பப்படாமல் உள்ளது என்றும்,

    3 துணைவேந்தர்கள் நியமனம், 4 நடவடிக்கை உத்தரவுகள், முன்கூட்டியே 54 கைதிகளுக்கு விடுதலையளிப்பது தொடர்பான கோப்புகள்,

    டி.என்.பி.எஸ்.சி.தலைவர் நியமனம், 12 மசோதாக்கள் உள்ளிட்டவை நிலுவையில் உள்ளது என்றும் சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது.

    கூட்டம் 

    வரும் 18ம் தேதி கூடுகிறது சிறப்பு சட்டமன்ற கூட்டம் 

    இந்நிலையில், தற்போது அரசு மூலம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கு உரிய விளக்கம் அளிக்கவேண்டும் என்றுக்கூறி ஆளுநர் திருப்பியனுப்பியுள்ளார்.

    அவர் திருப்பியனுப்பியுள்ள மசோதாக்களுள் பெரும்பாலானது பல்கலைக்கழங்களை தொடர்புடையது என்றும் கூறப்படுகிறது.

    இதனால், மீண்டும் சிறப்பு சட்டமன்றத்தினை கூட்டி ஆளுநர் திருப்பியனுப்பிய மசோதாக்களை மீண்டும் அப்படியே நிறைவேற்றி அனுப்புவதற்கு மாநில அரசு முடிவு செய்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    இதற்கிடையே, "இரண்டாவது முறையாக ஒரு மசோதா ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் பட்சத்தில் அதற்கு அவர் ஒப்புதல் அளிப்பதை தவிர வேறுவழியில்லை" என்றும்,

    "இந்நடைமுறை ஆளுநருக்கும் தெரியும் ஆனால் அவர் அதனை ஏற்க மறுக்கிறார்" என்றும் சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார்.

    இதன்படி இந்த சிறப்பு சட்டமன்ற கூட்டம் வரும் 18ம்.,தேதி கூட்டப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக அரசு
    ஆர்.என்.ரவி
    சபாநாயகர்
    சட்டமன்றம்

    சமீபத்திய

    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    தமிழக அரசு

    விரைவில் திருநங்கைகளுக்கும் உரிமை தொகை: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு  மு.க.ஸ்டாலின்
    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கான பிரத்யேக அரங்கம் - பணிகள் தீவிரம்  ஜல்லிக்கட்டு
    உணவுத்தரம் குறித்து புகாரளிக்க வாட்ஸ் அப் நம்பர் - தமிழக அரசு  தமிழ்நாடு
    முதல்வர் அறிவித்த இழப்பீட்டால் ஏமாற்றமடைந்த டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரி

    ஆர்.என்.ரவி

    தமிழ்நாடு அமைதி பூங்காவா? என கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி  தமிழ்நாடு
    அரசியல் சாசனத்தை மீறும் கவர்னரை ஜனாதிபதி உடனே திரும்ப பெறவேண்டும் - செல்வப்பெருந்தகை கவர்னர்
    சிறுமிகளுக்கு கன்னித்தன்மை சோதனை - தமிழக தலைமை செயலாளருக்கு நோட்டீஸ்  தமிழ்நாடு
    தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கம் அமைச்சரவை

    சபாநாயகர்

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் 'டிஜிட்டல் ஹவுஸ்' திட்டம் இன்று முதல் அறிமுகம்  தமிழ்நாடு
    எதிர்க்கட்சி துணை தலைவரின் இருக்கை விவகாரம் - சபாநாயகரை சந்தித்து மனு  தமிழ்நாடு
    ஆந்திரா சட்டசபை - விசில் அடித்து அமளியில் ஈடுபட்ட நடிகர் பாலகிருஷ்ணா ஆந்திரா
    புதுச்சேரி அமைச்சர் நீக்கப்பட்டதற்கு மத்திய அரசு ஒப்புதல் புதுச்சேரி

    சட்டமன்றம்

    தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை திருப்பியனுப்பிய ஆளுநர்-அமைச்சர் பேட்டி தமிழ்நாடு
    பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதாமல் ஆப்சென்ட்டான 50,000 மாணவர்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் பள்ளி மாணவர்கள்
    தமிழகத்தில் போக்ஸோ சட்டத்தில் இருந்து யாரும் எளிதில் தப்ப முடியாது - அமைச்சர் ரகுபதி தமிழ்நாடு
    தமிழகத்தில் இனி ஆன்லைனில் ஆவின் பொருட்கள் விற்பனை - அமைச்சர் நாசர் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025