Page Loader
மாநில சுயாட்சியை பாதுகாக்க முன்னாள் நீதிபதி தலைமையில் உயர்மட்டக் குழு அமைப்பு; தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகத்தில் மாநில சுயாட்சியை பாதுகாக்க முன்னாள் நீதிபதி தலைமையில் உயர்மட்டக் குழு அமைப்பு

மாநில சுயாட்சியை பாதுகாக்க முன்னாள் நீதிபதி தலைமையில் உயர்மட்டக் குழு அமைப்பு; தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Apr 15, 2025
01:13 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய அரசியலமைப்பின் கூட்டாட்சி கட்டமைப்பை மத்திய அரசு நீர்த்துப் போகச் செய்வதாக குற்றம் சாட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். மாநில சுயாட்சி தொடர்பாக மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை தாக்கல் செய்து பேசியபோது, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழுவை அமைப்பதாக அறிவித்தார். இந்தக் குழு கூட்டாட்சி தொடர்பான பிரச்சினைகளை ஆராய்ந்து, தமிழ்நாட்டின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்கும். 1969 ஆம் ஆண்டு மாநில சுயாட்சித் தீர்மானத்தைத் தொடங்கிய முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நடவடிக்கையை ஒப்பிட்டு வரலாற்று ஒற்றுமையை சுட்டிக் காட்டினார். அதைத் தொடர்ந்து 1974 ஆம் ஆண்டு மற்றொரு தீர்மானமும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

தலையீடு

முக்கிய துறைகளில் மத்திய அரசின் தலையீடு

மருத்துவக் கல்வி, சட்டம் மற்றும் நீதி மற்றும் வருவாய் போன்ற துறைகளில் தலையிடுவதன் மூலம் மத்திய அரசு மாநில அதிகாரங்களை ஆக்கிரமித்து வருவதாக முதல்வர் குற்றம் சாட்டினார். நீட், மொழிக் கொள்கை, துணைவேந்தர்கள் நியமனம் மற்றும் தொகுதி மறுவரையறை போன்ற விஷயங்களில் மத்திய அரசின் நிலைப்பாட்டை அவர் மேலும் விமர்சித்தார். இதற்கிடையே, 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், திமுக மாநில உரிமைகள் மற்றும் சுயாட்சியை கையில் எடுத்துள்ளது அரசியல் ரீதியாக பலன் தருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சுமார் 15 ஆண்டுகாலம் மத்திய அரசில் அங்கம் வகித்தும் அப்போதெல்லாம் எதுவும் செய்யாமல், இப்போது சுய அரசியல் ஆதாயத்திற்காக இதை கையில் எடுப்பதாக பொதுமக்கள் முனுமுனுக்கின்றனர்.