NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 16 இந்திய மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை; வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    16 இந்திய மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை; வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் கடிதம்

    16 இந்திய மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை; வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 24, 2024
    04:47 pm

    செய்தி முன்னோட்டம்

    நெடுந்தீவு அருகே இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் 16 பேரை விடுவிக்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    வியாழக்கிழமை (அக்டோபர் 21) அவர் அனுப்பிய கடிதத்தில், இந்திய மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதாலும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதாலும் கடலோர மக்களுக்கு ஏற்படும் துயரங்களை தெரிவித்துளளார்.

    தொடர்ந்து நிலவி வரும் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தினார்.

    மேலும் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    நிச்சயமற்ற தன்மை

    நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும் கைதுகள்

    இதுபோன்ற சம்பவங்கள் மீனவ சமூகத்திற்கு கடுமையான துயரத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்துவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் கூறியுள்ளார்.

    முன்னதாக, பஹ்ரைன் கடலோரக் காவல்படையினரால் கைது செய்யப்பட்ட திருநெல்வேலி இடிந்தகரையைச் சேர்ந்த 28 மீனவர்கள் தொடர்பாகவும் கடந்த மாதம் முதல்வர் இதேபோல் கடிதம் எழுதியிருந்த நிலையில், அதைப் பின்பற்றி இப்போதும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் செப்டம்பரில், இலங்கையால் கைது செய்யப்பட்ட 37 மீனவர்களை விடுவிக்கக் கோரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், பின்னர் மத்திய அரசின் தலையீட்டால் விடுதலை செய்யப்படுவதும் வாடிக்கையாக இருந்து வரும் நிலையில், இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே மீனவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

    இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 16 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் @DrSJaishankar அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள்… pic.twitter.com/2mw95wQlcU

    — CMOTamilNadu (@CMOTamilnadu) October 24, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மீனவர்கள்
    தமிழக முதல்வர்
    மு.க.ஸ்டாலின்
    எஸ்.ஜெய்சங்கர்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மீனவர்கள்

    தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட் வானிலை அறிக்கை
    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 37 தமிழக மீனவர்களை மீட்க ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம் ராகுல் காந்தி
    தென்தமிழகத்தில் வெளுக்கப்போகுது கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட் தமிழகம்

    தமிழக முதல்வர்

    ஸ்பெயினில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு: தலைமை தாங்கும் தமிழக முதல்வர் தமிழ்நாடு
    உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சை சந்தித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் நோவக் ஜோகோவிச்
    ஸ்பெயின் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு ஸ்பெயின்
    "தமிழ்நாட்டினுள் CAA கால்வைக்க விடமாட்டோம்": முதலமைச்சர் ஸ்டாலின் சூளுரை முதல் அமைச்சர்

    மு.க.ஸ்டாலின்

    கலைஞரின் அனைத்து நூல்களும் நாட்டுடைமை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி
    துரைமுருகன் ரொம்ப டேஞ்சர்; ஸ்டாலினை மேடையில் வைத்துக்கொண்டு துரைமுருகனை கலாய்த்த ரஜினிகாந்த் ரஜினிகாந்த்
    உஷாரா இருப்பேன், கவலை வேண்டாம்; ரஜினிகாந்த் அறிவுரையை ஏற்றார் முதல்வர் ஸ்டாலின் ரஜினிகாந்த்
    மயிலாடுதுறை பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இழப்பீடு மயிலாடுதுறை

    எஸ்.ஜெய்சங்கர்

    "இளநிலைப் பட்டதாரிகளை வரவேற்கிறோம்": விசா விதி மாற்றங்கள் குறித்து பேசிய இங்கிலாந்து அமைச்சர்  உலகம்
    கனடாவில் நடந்த இந்திரா காந்தியின் படுகொலை கொண்டாட்டம்: இந்திய தலைவர்கள் கடும் எதிர்ப்பு  இந்தியா
    கனடாவை விட்டு வெளியேற்றப்படும் இந்திய மாணவர்கள்: என்ன நடக்கிறது  கனடா
    10 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூலை 24ம் தேதி தேர்தல்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025