Page Loader
அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000; தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000; தொடங்கி வைத்தார் முதல்வர்

அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000; தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 30, 2024
01:05 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் உயர்கல்வி படிக்கும் தகுதியுடைய மாணவிகளுக்கு மாதம் ₹1,000 நிதியுதவி வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார். இம்முயற்சியில் இப்போது அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகளைத் தவிர, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர். முன்னதாக, செப்டம்பர் 5, 2022 இல் தொடங்கப்பட்ட புதுமைப் பெண் திட்டம், உயர்கல்வி படிப்புகளில் சேரும், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு நிதியுதவி வழங்குகிறது. குடும்பங்கள் மீதான நிதிச்சுமைகளைக் குறைப்பது மற்றும் இளவயது திருமணங்களைத் தடுப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

மாணவிகள்

விரிவாக்கத்தை மூலம் பயனடையும் மாணவிகள்

விரிவாக்கத்தின் மூலம், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்துமுடித்து, உயர்கல்வி படிக்கும் 75,028 மாணவிகள் பயனடைவார்கள். இந்த நிதி நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டு, நிதிக் கட்டுப்பாடுகள் இல்லாமல் கல்வியைத் தொடர அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. இது தவிர, 2021 ஆம் ஆண்டு முதல் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ₹1,000 உதவித் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் உள்ளிட்ட பல பெண்களை மையமாகக் கொண்ட திட்டங்களைச் செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.