Page Loader
தமிழகத்தில் குறவன் குறத்தி ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு தடை - தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் குறவன் குறத்தி ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு தடை - தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் குறவன் குறத்தி ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு தடை - தமிழக அரசு உத்தரவு

எழுதியவர் Nivetha P
Mar 13, 2023
02:58 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் குறவன்-குறத்தி என்னும் பெயரில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என கடந்த ஜனவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவில், கோயில் திருவிழாக்களில் நடத்தப்படும் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் எந்தவொரு சமூகமும் குறிப்பாக, பழங்குடியின மக்கள் இழிவுபடுத்தப்பட கூடாது என்பதனை உறுதி செய்ய வேண்டும். குறவன்-குறத்தி என்னும் பெயரில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று கூறப்பட்டிருந்தது. மேலும் இது போன்ற நிகழ்ச்சிகளில் குறவர் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் இருந்தால் நிகழ்ச்சி ஏற்பாட்டளார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

குறவன்-குறத்தி ஆட்டம்

அடையாளம் காணப்பட்ட 100 கலைகள் பட்டியலில் இருந்து நீக்கம்

இதனை தொடர்ந்து, தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்பிரிவினர் இதற்கென சிறப்பு பிரிவினை ஏற்படுத்தி குறவன்-குறத்தி என்னும் பெயரில் ஆபாச நடனங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வதையும் தடுக்க வேண்டும். அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தற்போது தமிழகத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை திருவிழாக்களில் நடத்தக்கூடாது என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இது குறித்த அரசாணையினை சுற்றுலா, பண்பாடு, அறநிலையத்துறை முதன்மை செயலாளர் பி.சந்திரமோகன் பிறப்பித்துள்ளார். அதில், தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்வதற்கான அடையாளம் காணப்பட்ட 100 கலைகள் பட்டியலில் 40வது இடத்தில் இருந்த குறவன்-குறத்தி ஆட்டம் என்னும் கலைப்பிரிவு நீக்கம் செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.