NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அமைதிக்கான பிரார்த்தனையுடன் ஜி20 மாநாட்டை முடித்து வைத்தார் பிரதமர் மோடி 
    அமைதிக்கான பிரார்த்தனையுடன் ஜி20 மாநாட்டை முடித்து வைத்தார் பிரதமர் மோடி 
    இந்தியா

    அமைதிக்கான பிரார்த்தனையுடன் ஜி20 மாநாட்டை முடித்து வைத்தார் பிரதமர் மோடி 

    எழுதியவர் Sindhuja SM
    September 10, 2023 | 02:11 pm 1 நிமிட வாசிப்பு
    அமைதிக்கான பிரார்த்தனையுடன் ஜி20 மாநாட்டை முடித்து வைத்தார் பிரதமர் மோடி 
    அடுத்த வருடம் ஜி20-ஐ வழிநடத்த இருக்கும் பிரேசில் நாட்டிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

    பிரேசில் அதிபரிடம் ஜி20 தலைவர் பதவியை ஒப்படைத்த பிரதமர் நரேந்திர மோடி, இன்று(செப் 10) ஜி20 மாநாட்டை அமைதிக்கான பிரார்த்தனையுடன் நிறைவு செய்தார். "ஜி20 மாநாட்டின் முடிவை நான் அறிவிக்கிறேன். ஒரே பூமி ஒரே குடும்பம் மற்றும் ஒரே எதிர்காலம் என்ற பாதை மகிழ்ச்சியாக இருக்கும் என நம்புகிறோம். நன்றி" என்று தனது இறுதி உரையில் பிரதமர் கூறினார். நவம்பர் 2023 வரை ஜி20 தலைவர் பதவி இந்தியாவிடம் தான் இருக்கும் என்பதால், உச்சிமாநாட்டின் போது விவாதிக்கப்பட்ட விஷயங்களை மதிப்பாய்வு செய்ய ஒரு ஆன்லைன் அமர்வையும் பிரதமர் மோடி முன்மொழிந்தார். மேலும், அடுத்த வருடம் ஜி20-ஐ வழிநடத்த இருக்கும் பிரேசில் நாட்டிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

     'ஸ்வாதி அஸ்து விஷ்வா' என்ற பிரார்த்தனையுடன் ஜி20 மாநாடு நிறைவு 

    ஜி20 தலைவர் பதவியை ஏற்றுக்கொண்ட பிரேசில் அதிபர், "ஜி 20 கூட்டத்தை திறம்பட வழிநடத்தியதற்காகவும், இந்த உச்சிமாநாட்டில் சிறப்பாக பணியாற்றியதற்காகவும்" பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். உலகளவில் சமத்துவத்தை நிலைநாட்டுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். உச்சிமாநாட்டின் இரண்டாவது நாளான இன்று, புது டெல்லியின் ராஜ்காட்டில் ஜி20 தலைவர்கள் மற்றும் தூதுக்குழு தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். அவர்கள் மகாத்மா காந்திக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து ஜி 20 நடைபெறும் இடமான பாரத் மண்டபத்தில் மரம் நடும் விழா நடைபெற்றது. அதன் பிறகு, : 'ஒரு எதிர்காலம்' என்ற தலைப்பிலான மூன்றாவது அமர்வை வழிநடத்திய பிரதமர் மோடி, 'ஸ்வாதி அஸ்து விஷ்வா' என்ற பிரார்த்தனையுடன் ஜி20 மாநாட்டை நிறைவு செய்தார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    புது டெல்லி
    பிரதமர் மோடி
    ஜி20 மாநாடு

    புது டெல்லி

    புது டெல்லி: ஜி20 உச்சிமாநாட்டில் நடந்த மிக முக்கியமான 5 நிகழ்வுகள்  ஜி20 மாநாடு
    அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜோ பைடன்
    ஜி20 உச்சிமாநாட்டின் 2வது நாளான இன்று என்ன நடக்கும்? ஜி20 மாநாடு
    ரஷ்ய-உக்ரைன் போருக்கு எதிரான புதுடெல்லி பிரகடனத்தில் என்ன கூறப்பட்டுள்ளது? ஜி20 மாநாடு

    பிரதமர் மோடி

    ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது என்ன: பிரதமர் உரையின் சுருக்கம் புது டெல்லி
    ஜி20 - 21வது நிரந்தர உறுப்பு நாடாக இணைந்தது ஆப்பிரிக்க யூனியன் இந்தியா
    "பாரத் உங்களை வரவேற்கிறது": ஜி20 உச்சிமாநாட்டில் உலகத் தலைவர்களை வரவேற்ற பிரதமர் மோடி இந்தியா
    ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடியின் இருக்கைக்கு முன் 'பாரத்' பெயர்ப்பலகை இந்தியா

    ஜி20 மாநாடு

    உலகளாவிய பசுமை எரிபொருள் கூட்டணி குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை! இந்தியா
    டெல்லியில் உள்ள இந்து கோவிலில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் வழிபாடு  டெல்லி
    இந்தியா முதல் ஐரோப்பா வரை: சர்வதேச வழித்தடம் அறிமுகம்  இந்தியா
    ஜி20 மாநாடு: புதுடெல்லி பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவித்தார் பிரதமர் மோடி! டெல்லி
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023