NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லியில் கைது செய்யப்பட்ட 3 பயங்கரவாதிகளும் பொறியியல் படித்துவிட்டு பயங்கரவாத பயிற்சி அளித்து வந்ததாக தகவல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லியில் கைது செய்யப்பட்ட 3 பயங்கரவாதிகளும் பொறியியல் படித்துவிட்டு பயங்கரவாத பயிற்சி அளித்து வந்ததாக தகவல் 
    பொறியியலாளரான ஷாநவாஸ், ஐஎஸ்ஐஎஸ் புனே தொகுதி வழக்கில் தேடப்பட்டு வந்தவர் ஆவார்.

    டெல்லியில் கைது செய்யப்பட்ட 3 பயங்கரவாதிகளும் பொறியியல் படித்துவிட்டு பயங்கரவாத பயிற்சி அளித்து வந்ததாக தகவல் 

    எழுதியவர் Sindhuja SM
    Oct 02, 2023
    06:15 pm

    செய்தி முன்னோட்டம்

    தேசிய புலனாய்வு அமைப்பின்(NIA) 'மோஸ்ட் வான்டட்' லிஸ்டில் இருக்கும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி என்று சந்தேகிக்கப்படும் ஒரு நபர் உட்பட 3 பயங்கரவாதிகள் இன்று டெல்லியில் வைத்து பிடிபட்டனர்.

    அந்த 3 பயங்கரவாதிகளும் பொறியியல் படித்துவிட்டு நாடு முழுவதும் பயங்கரவாத பயிற்சி அளித்து வந்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

    ஷாபி உஸ்ஸாமா(எ)ஷாநவாஸ், டெல்லியில் உள்ள அவரது மறைவிடத்திலிருந்து டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டார்.

    அவருடன் கைது செய்யப்பட்ட மற்ற இரண்டு பயங்கரவாதிகள் ரிஸ்வான் அஷ்ரப் மற்றும் அர்ஷத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    பொறியியலாளரான ஷாநவாஸ், ஐஎஸ்ஐஎஸ் புனே தொகுதி வழக்கில் தேடப்பட்டு வந்தவர் ஆவார்.

    அவர் புனேவில் இருந்து டெல்லிக்கு தப்பிச் சென்று அங்கு ஒரு மறைவிடத்தில் வசித்து வந்தார்.

    டுய்வ்க்

    பயங்கரவாதிகளுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் 

    இந்நிலையில், "சுரங்கப் பொறியாளரான ஷாநவாஸ், தென்கிழக்கு டெல்லியில் ஒரு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்," என்று டெல்லி காவல்துறையினர் செய்தியாளர் கூட்டத்தில் பேசும் போது தெரிவித்துள்ளனர்.

    மேலும், ரிஸ்வான் அஷ்ரப் லக்னோவிலும், அர்ஷத் முராதாபாத்திலும் கைது செய்யப்பட்டனர்.

    "முக்கிய குற்றவாளியான ஷாநவாஸ், அவரது மற்ற இரண்டு கூட்டாளிகளுடன் இன்று காலை கைது செய்யப்பட்டார். மற்றொரு குற்றவாளி, முகமது ரிஸ்வான், தலைமறைவாக உள்ளார்," என்று டெல்லியின் சிறப்பு காவல் ஆணையர் ஹெச்ஜிஎஸ் தலிவால் தெரிவித்துள்ளார்.

    குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 7 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளின் மறைவிடங்களை சோதனையிட்டபோது, ​​கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் தயாரிக்கும் பல்வேறு கருவிகள் மீட்கப்பட்டன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    பயங்கரவாதம்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    டெல்லி

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து  எய்ம்ஸ்
    சட்டமாகியது டெல்லி அவசர சட்ட மசோதா: ஒப்புதல் அளித்தார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
    சுதந்திர தினம்: செங்கோட்டையில் 10,000 போலீசார் பாதுகாப்பு  சுதந்திர தினம்
    சுதந்திர தினத்தன்று பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் அமைப்புகள் திட்டம்  தீவிரவாதிகள்

    பயங்கரவாதம்

    நக்சல் எதிர்ப்பிலிருந்து தீவிரவாத எதிர்ப்புக்கு இடம் பெயரும் சிஆர்பிஎஃப் கோப்ரா படைப்பிரிவு ஜம்மு காஷ்மீர்
    சிரியாவில் நடந்த தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் கொலை; புதிய தலைவர் அறிவிப்பு ஐ.எஸ்.ஐ.எஸ்
    தீவிரவாதியின் மனைவியை நாட்டின் அமைச்சராக நியமித்த பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    தீவிரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் இல்லை: அனுராக் தாக்கூர் இந்திய கிரிக்கெட் அணி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025