NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீட்டு மனுவினை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீட்டு மனுவினை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் 
    வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீட்டு மனுவினை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

    வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீட்டு மனுவினை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் 

    எழுதியவர் Nivetha P
    Oct 16, 2023
    06:21 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு, தருமபுரி-அரூர்-பாப்பிரெட்டிப்பட்டி நகரங்களுக்கிடையே அமைந்துள்ளது வாச்சாத்தி மலைக்கிராமம்.

    கடந்த 1992ம்.,ஆண்டு கிட்டத்தட்ட 655 பேர் இக்கிராமத்தில் வசித்து வந்துள்ளனர்.

    இவர்களுள் 400க்கும் மேற்பட்டோர் மலைவாழ் மக்கள்.

    அதன்படி, இக்கிராமத்தில் சந்தன மரங்கள் வெட்டி விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்த நிலையில், 155 வனத்துறையினர், 6 வருவாய் துறையினர், 108 காவல்துறையினர் என மொத்தம் 269 பேர் 1992ம் ஆண்டு ஜூன்.20ம்.,தேதி சோதனையிட்டனர்.

    அப்போது சில வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சந்தனக்கட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டதோடு, 90 பெண்கள் உள்பட 133 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதனிடையே, இச்சோதனையின் போது, 18 மலைவாழ் இனத்தை சேர்ந்த பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும், கிராமமக்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தியதாகவும் அரூர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்டோர் புகாரளித்தனர்.

    மனு 

    வனத்துறை அதிகாரிகள் சரணடைய உத்தரவு 

    இது குறித்து சிபிஐ நடத்திய விசாரணையில் 269 அதிகாரிகளும் குற்றம் செய்தது உறுதியான நிலையில் கைது செய்யப்பட்டனர்.

    தருமபுரி முதன்மை நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு 2008ல் மாற்றப்பட்ட நிலையில், விசாரணையினை மேற்கொண்ட நீதிபதி குமரகுரு கடந்த 2011ம் ஆண்டு செப்.,29ம் தேதி தீர்ப்பினை வழங்கினார்.

    குற்றம்சாட்டப்பட்ட 269 பேரில் அப்போது உயிருடன் இருந்த 215 குற்றவாளிகளுக்கு இத்தீர்ப்பு அமல்படுத்தப்பட்டது.

    இந்நிலையில் இந்த வழக்கின் முதன்மை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஐ.எப்.எஸ்.அதிகாரியான பாலாஜி மற்றும் எல்.நாதன், இவ்வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையினை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவினை உச்ச நீதிமன்றம் தற்போது தள்ளுபடி செய்துள்ளது.

    மேலும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட வனத்துறை அதிகாரிகளும் அடுத்த 6 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    உச்ச நீதிமன்றம்
    வனத்துறை
    சிபிஐ

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    தமிழ்நாடு

    கர்நாடகத்தை கண்டித்து டெல்டா விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம் அறிவிப்பு போராட்டம்
    14 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    பாலஸ்தீனியம், இஸ்ரேல் வாழ் தமிழர்களுக்கு உதவி எண்களை அறிவித்தது தமிழ்நாடு அரசு இந்தியா
    நாகை- இலங்கை இடையே கப்பல் போக்குவரத்துக்கான சோதனை ஓட்டம்தொடங்கியது இலங்கை

    உச்ச நீதிமன்றம்

    செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 12ம் தேதி வரை காவலில் வைத்து அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி செந்தில் பாலாஜி
    தலைமை நீதிபதியை தேர்தல் ஆணையர்கள் நியமன குழுவில் இருந்து நீக்க மசோதா தாக்கல் தேர்தல் ஆணையம்
    பில்கிஸ் பானு பலாத்கார வழக்கு - சரமாரியான கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்றம்  பலாத்காரம்
    சட்டம் பேசுவோம்: பதின் பருவ உடலுறவை குற்றமற்றதாக்குவது குறித்து விவாதிக்கும் உச்ச நீதிமன்றம் மத்திய அரசு

    வனத்துறை

    அரிக்கொம்பன் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த பால்ராஜ் குடும்பத்திற்கு ₹5 லட்சம் நிவாரணம்!  தமிழ்நாடு
    சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி விருதுநகர்
    நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிடிபட்டது அரிக்கொம்பன் யானை! தமிழ்நாடு
    அரிக்கொம்பன் யானை, களகாடு வனப்பகுதிக்கு அழைத்து செல்லப்படுகிறது  இந்தியா

    சிபிஐ

    ஒடிசா ரயில் விபத்து: விசாரணை விரைவில் சிபிஐக்கு மாறுகிறது இந்தியா
    செந்தில் பாலாஜி கைது எதிரொலி: CBI க்கு தமிழக அரசு வைத்த செக்  தமிழக அரசு
    மணிப்பூர் கலவரம் - வழக்கு விசாரணை சிபிஐ'க்கு மாற்றம்  கைது
    மணிப்பூர் வீடியோ வழக்கிற்கு FIR பதிவு செய்தது CBI மணிப்பூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025