NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மையை அரசியலமைப்பில் இருந்து நீக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மையை அரசியலமைப்பில் இருந்து நீக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
    சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மையை அரசியலமைப்பில் இருந்து நீக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

    சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மையை அரசியலமைப்பில் இருந்து நீக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 25, 2024
    03:42 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இருந்து சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மை ஆகிய வார்த்தைகளை நீக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை (நவம்பர் 25) தள்ளுபடி செய்தது.

    முன்னாள் ராஜ்யசபா எம்பி சுப்பிரமணியன் சுவாமி, வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய் மற்றும் பல்ராம் சிங் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் 1976 இல் 42 வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வார்த்தைகளை நீக்கக் கோரியிருந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி பி.வி.சஞ்சய் குமார் தலைமையிலான பெஞ்ச், அதன் முன்னுரை உட்பட அரசியலமைப்பை திருத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே உள்ளதை உறுதி செய்தது.

    விசாரணை

    விசாரணை தேவையில்லை

    இந்தியச் சூழலில் சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றின் பொருத்தத்தை நீதிமன்றம் வலியுறுத்தியது.

    அவற்றை நீக்குவதற்கான வாதங்களை விரிவான விசாரணைக்கு தேவையற்றது என்று கூறி அவற்றை நிராகரித்தது.

    சமூக சமத்துவம் மற்றும் மத நல்லிணக்கத்தை உறுதி செய்யும் வகையில், அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பில் இந்த விதிமுறைகள் ஒருங்கிணைந்தவை என்று பெஞ்ச் குறிப்பிட்டது.

    1949 இல் இந்தியா அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது. எனினும், இது பிற்கால திருத்தங்களின் செல்லுபடியை குறைக்காது தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்தார்.

    சோசலிசம் பொருளாதார சமத்துவத்திற்கான கலப்பு பொருளாதாரத்தை பரிந்துரைக்கிறது.

    மதச்சார்பின்மை மத நடுநிலை மற்றும் அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதையை உறுதி செய்கிறது.

    இதனுடன், முகவுரையை திருத்த முடியாது என்ற கூற்றுகளையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உச்ச நீதிமன்றம்
    இந்தியா
    நாடாளுமன்றம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    உச்ச நீதிமன்றம்

    எஸ்டி/எஸ்டி இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் கொண்டுவர மாட்டோம் என மத்திய அரசு அறிவிப்பு இட ஒதுக்கீடு
    பங்களாதேஷின் தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் ராஜினாமா செய்ய முடிவு பங்களாதேஷ்
    பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மீதான அவமதிப்பு வழக்கை முடித்து வைத்த உச்ச நீதிமன்றம்  பதஞ்சலி
    கனிமங்கள் மீதான ராயல்டி நிலுவைத் தொகையை வசூலிக்க முடியும்: உச்ச நீதிமன்றம் மாநிலங்கள்

    இந்தியா

    நெட்ஃபிலிக்ஸ் சேவையில் இடையூறு; சமூக வலைதளங்களில் பயனர்கள் கொதிப்பு நெட்ஃபிலிக்ஸ்
    பங்களாதேஷ் மீது பொருளாதராத் தடை; டொனால்ட் டிரம்பிடம் வலியுறுத்த உள்ள இந்திய அமெரிக்கர்கள் பங்களாதேஷ்
    மேக் இன் இந்தியாவால் நடந்த மாற்றம்; மின்னணு சாதன இறக்குமதி 2023-24 நிதியாண்டில் கணிசமாக குறைவு வணிக புதுப்பிப்பு
    10 மில்லியன் டாலர் மதிப்பிலான பழங்கால தொல்பொருட்களை இந்தியாவிடம் ஒப்படைத்தது அமெரிக்கா அமெரிக்கா

    நாடாளுமன்றம்

    'அனைத்து துறைகளிலும் சமமாக வளர்ச்சியடைவதை இந்தியா குறிக்கோளாக கொண்டுள்ளது': நிர்மலா சீதாராமன்  இடைக்கால பட்ஜெட் 2024
    'சுற்றுலா பயணிகளை ஈர்க்க லட்சத்தீவில் பெரும் முதலீடு': இடைக்கால பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன்  நிர்மலா சீதாராமன்
    மக்களவையில் நிறைவேற்றப்பட்டது நிதி மசோதா 2024: சபை ஒத்திவைப்பு  இந்தியா
    ரயில்வே பட்ஜெட் 2024: வந்தே பாரத் தரத்திற்கு மேம்படுத்தப்பட இருக்கும் 40,000 ரயில் பெட்டிகள் இந்திய ரயில்வே
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025