NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு தேர்தலில் போட்டியிட ஆயுட்கால தடை- விரிவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு தேர்தலில் போட்டியிட ஆயுட்கால தடை- விரிவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு
    குற்ற வழக்குகளில் தொடர்புடைய எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்க கீழமை நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.

    குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு தேர்தலில் போட்டியிட ஆயுட்கால தடை- விரிவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு

    எழுதியவர் Srinath r
    Nov 09, 2023
    01:42 pm

    செய்தி முன்னோட்டம்

    குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற நபர்கள், தேர்தலில் போட்டியிட ஆயுட்கால தடை விரிப்பது குறித்து, விரிவான விசாரணை நடத்தப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மீதான குற்றவாளக்குகளை விரைந்து விசாரிக்க உத்தரவிட கோரியும்,

    குற்ற வழக்குகளை தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாழ்நாள் தடை விதிக்க கோரியும், பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய், உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு, தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதி ஜேபி பார்திவாலா, நீதிபதி மனோஜ் மிஸ்ரா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றங்களுக்கு சில உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

    2nd card

    எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கு விசாரணையை தீவிர படுத்தவேண்டும்

    எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து விசாரிக்க, எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உயர்நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தேவைப்பட்டால் சிறப்பு அமர்வுகள் அமைத்து, அட்வகேட் ஜெனரல் உதவியை நாடலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் ஆயுள் தண்டனை, மரண தண்டனை விதிக்கப்பட்ட எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை, விரைந்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகளை தாமாக முன்வந்து, முன்னுரிமை வழங்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகளை, உயர்நீதிமன்றம் வரையறை படுத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    3rd card

    பொதுவான முறை வகுப்பது கடினம்- உச்சநீதிமன்றம்

    எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க நாடு முழுவதும், பொதுவான முறையை வகுப்பது கடினம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    அதனால், மாநில உயர்நீதிமன்றங்கள் இந்த வழக்குகளுக்கு முன்னுரிமை அளித்து விசாரணையை விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளனர்.

    கடந்த 2013 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, இரண்டு வருடம் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெரும் மக்கள் பிரதிநிதிகளின் பதவி உடனடியாக பறிபோகும்.

    மேலும், தண்டனை முடிந்த பின்னர் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், தற்போது 6 ஆண்டுகள் தடையை வாழ்நாள் தடையாக மாற்ற, விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உச்ச நீதிமன்றம்
    உயர்நீதிமன்றம்
    பாஜக
    சிறை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    உச்ச நீதிமன்றம்

    காவிரி நீர் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்த கர்நாடக அரசு தமிழ்நாடு
    காவிரி மேலாண்மை உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் தமிழக அரசு
    சனாதன விவகாரம் - உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம் உதயநிதி ஸ்டாலின்
    ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு ஆந்திரா

    உயர்நீதிமன்றம்

    மரணதண்டனை மனு விசாரணை: யாசின் மாலிக்கை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்ட NIA இந்தியா
    ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை - மதுரை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு
    சடலங்களுடன் உடலுறவு கொள்வதற்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம் இந்தியா
    வனப் பாதுகாப்பு மசோதா தமிழ் மொழியில் வெளியிடப்படும்: மத்திய அரசு  இந்தியா

    பாஜக

    மோடி கூறிய 5-Tக்கு பதில் 5-c தான் ஆட்சியில் நடக்கிறது - முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் மோடி
     உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.25 கோடி - தொகையை உயர்த்திய அயோத்தி சாமியார் உதயநிதி ஸ்டாலின்
    நாளை கூடும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - கூட்டணி குறித்த முடிவு எடுக்கப்படுமா? அதிமுக
    பாஜக கூட்டணியில் இருந்து அதிகாரபூர்வமாக விலகியது அதிமுக  அதிமுக

    சிறை

    புழல் சிறையில் செந்தில் பாலாஜி; வைரலாகும் அவரின் சாப்பாடு மெனு  செந்தில் பாலாஜி
    முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வு  காவல்துறை
    பாரதியாரின் 103வது நினைவுநாள் - கடலூர் மத்திய சிறையிலுள்ள சிலைக்கு போலீசார் மரியாதை கடலூர்
    இன்று வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீடு மீதான தீர்ப்பு - ஓர் அலசல்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025