NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையினை திறக்கக்கோரி கரும்பு விவசாயிகள் நடைபயணம்-காவல்துறை தடுத்ததால் பரபரப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையினை திறக்கக்கோரி கரும்பு விவசாயிகள் நடைபயணம்-காவல்துறை தடுத்ததால் பரபரப்பு 
    அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையினை திறக்கக்கோரி நடைபயணம்-காவல்துறை தடுத்ததால் பரபரப்பு

    அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையினை திறக்கக்கோரி கரும்பு விவசாயிகள் நடைபயணம்-காவல்துறை தடுத்ததால் பரபரப்பு 

    எழுதியவர் Nivetha P
    Jun 27, 2023
    07:10 pm

    செய்தி முன்னோட்டம்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள சர்க்கரை ஆலையினை திறந்து கரும்பு அரவையை துவங்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரத போராட்டம் உள்ளிட்டவற்றை கரும்பு விவசாயிகள் ஏற்கனவே செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

    இதனிடையே, நேற்று(ஜூன்.,26) காலை குறிப்பிட்ட அந்த சர்க்கரை ஆலை முன்னிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபயணம் மேற்கொண்டு மனுவினை அளிக்க அவர்கள் முடிவு செய்து புறப்பட்டுள்ளனர்.

    இந்த நடைப்பயணத்திற்கான அனுமதியினை காவல்துறை மறுத்துள்ளது.

    இதனையடுத்து விவசாயிகள் மாநில சங்க தலைவர் வழக்கறிஞர் பழனிசாமி தலைமையில் சர்க்கரை ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

    சிறிது நேரம் கழித்து, மீண்டும் நடைபயணம் மேற்கொள்ள விவசாயிகள் முயற்சி செய்துள்ளார்கள்.

    நடைப்பயணம் 

    போலீஸ் சூப்பரண்ட் பாலசுந்தரம் விவசாயிகளோடு பேச்சுவார்த்தை 

    அப்போது காவல்துறை அவர்களை மீண்டும் தடுத்து நிறுத்தியதால் காவல்துறைக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

    பின்னர் விவசாயிகள் தங்கள் நடைப்பயணத்தினை துவங்கி ஆட்சியர் அலுவலகம் வரை சென்றுள்ளனர்.

    இடையே, அச்சம்பட்டி சாலை அருகே காவல்துறை இவர்களை தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இதுகுறித்த தகவல் அறிந்த போலீஸ் சூப்பரண்ட் பாலசுந்தரம் சம்பவயிடத்திற்கு சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

    அதன் பின்னரே அவர்கள் வேனில் ஏறி ஆட்சியர் அலுவலகம் சென்று மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காவல்துறை
    காவல்துறை
    மதுரை
    விவசாயிகள்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    காவல்துறை

    உடல் பருமனான காவலர்களுக்கு மூன்று மாத கெடு: அசாம் காவல்துறை அதிரடி  இந்தியா
    கள்ளச்சாராய விவகாரம் - முக்கிய குற்றவாளி கைது  அரசு மருத்துவமனை
    மிசோரத்தில் ரூ.25.20 லட்சம் மதிப்புள்ள போலி இந்திய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்!  இந்தியா
    கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை  மு.க ஸ்டாலின்

    காவல்துறை

    கரூர்: செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய பெண்! காவல்துறை
    சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் பலி  காவல்துறை
    சயனைடு கலந்த மது குடித்து 2 பேர் பலி - டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்ளிட்ட 4 பேர் பணியிடை நீக்கம்  தமிழ்நாடு
    கலாஷேத்ரா விவகாரம் - 10க்கும் மேற்பட்ட மாணவிகள் நேரில் ஆஜராகி விளக்கம்  சென்னை

    மதுரை

    தமிழ்நாடு-மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் 18ம் தேதி வருகை தருகிறார் இந்திய ஜனாதிபதி டெல்லி
    மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 2024ம் ஆண்டின் இறுதியில் துவங்கும் என அறிவிப்பு சென்னை
    மதுரைக்கு வருகை தரும் இந்திய ஜனாதிபதி - 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை தமிழ்நாடு
    அமைச்சர் தொகுதியில் கண்மாயை காணவில்லை: ஆட்சியரிடம் புகார் அளித்த மக்கள் தமிழ்நாடு

    விவசாயிகள்

    குருக்ஷேத்ரா-டெல்லி நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025