NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஸ்டர்லைட் ஆலை செயல்பட அனுமதிக்க முடியாது - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஸ்டர்லைட் ஆலை செயல்பட அனுமதிக்க முடியாது - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில்
    ஸ்டர்லைட் ஆலை செயல்பட அனுமதிக்க முடியாது - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில்

    ஸ்டர்லைட் ஆலை செயல்பட அனுமதிக்க முடியாது - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில்

    எழுதியவர் Nivetha P
    Aug 21, 2023
    03:11 pm

    செய்தி முன்னோட்டம்

    தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வந்த ஸ்டர்லைட் ஆலை துவங்கிய நாளிலிருந்தே தொடர்ந்து 22 ஆண்டுகளாக சுற்றுசூழல் பாதிப்பினை ஏற்படுத்தி வந்துள்ளது.

    இந்த ஆலை செயல்பாடு காரணமாக சுற்றுவட்டார கிராமங்களின் நிலத்தடி நீர் முற்றிலும் பாழானது என்று குற்றச்சாட்டுகள் எழுந்தது.

    அதனைத்தொடர்ந்தே இந்த ஆலையினை மூட உத்தரவிடக்கோரி பல போராட்டங்கள் நடத்தப்பட்டது.

    இதன் உச்சகட்டமாக கடந்த 2018ம் ஆண்டு மே 22ம்தேதி பொதுமக்கள் முன்னின்று பிரம்மாண்ட போராட்டத்தினை நடத்தினர்.

    இதில் காவல்துறை நடத்திய துப்பாக்கிசூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதனை தொடர்ந்து மே 28ம் தேதி இந்த ஆலையினை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

    வேதாந்தா நிறுவனம் 

    அபராதம் விதித்து தள்ளுபடி செய்ய கோரிக்கை 

    இது தொடர்பான விசாரணைகளை உச்ச நீதிமன்றம் தற்போது நடத்திவரும் நிலையில், தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் இன்று(ஆகஸ்ட்.,21) மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை ஒன்றினை தாக்கல் செய்துள்ளது.

    அதில், கடந்த 22 ஆண்டுகளாக வேதாந்தா நிறுவனம் நடத்தி வந்த ஸ்டர்லைட் ஆலையால் கடும் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிறுவனம் அடிப்படையான விதிகளை கூட பின்பற்றவில்லை.

    இது சுற்றுசூழல் பாதுகாப்பு தொடர்பான விவகாரம் என்பதால் ஸ்டர்லைட் ஆலையினை தமிழ்நாட்டில் செயல்பட அனுமதிக்கவே முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    மேலும், வேதாந்தா நிறுவனம் தொடர்ந்துள்ள இந்த மேல்முறையீட்டு வழக்கிற்கு அபராதம் விதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தூத்துக்குடி
    காவல்துறை
    காவல்துறை
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தூத்துக்குடி

    தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலை விளக்க கருத்தரங்கு கூட்டம் - எஸ்.பி. பரிசீலிக்க உத்தரவு காவல்துறை
    தூத்துக்குடியில் ரூ.200க்கு பதிலாக வெறும் ரூ.20 அளித்த ஏடிஎம் - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி மாவட்ட செய்திகள்
    தமிழகத்தில் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாட்டம் தமிழ்நாடு
    வீடியோ: ஆசிரியரை துரத்தி துரத்தி அடித்த 7 வயது சிறுவனின் பெற்றோர் தமிழ்நாடு

    காவல்துறை

    இருவிரல் பரிசோதனை விவகாரம் - தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  காவல்துறை
    அலுவலகத்திற்குள் புகுந்து CEOவை வெட்டி கொன்ற முன்னாள் ஊழியர் பெங்களூர்
    காங்கிரஸ் தலைவரின் மொபைலை 'ஹேக்' செய்து பணம் பறிக்க முயன்ற இருவர் கைது  மத்திய பிரதேசம்
    முன்னாள் டிஜிபியின் பெயரை வைத்து பேஸ்புக்கில் மோசடி செய்த கும்பல்  சென்னை

    காவல்துறை

    நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் படியில் பயணம் செய்ய ஏற்பட்ட மோதல் - 2 பேர் பலி  நாகர்கோவில்
    பீகார் மாநிலத்தில் அதிகளவு மோமோக்கள் சாப்பிட்ட நபர் மரணம் - அதிர்ச்சி சம்பவம்  காவல்துறை
    கோவை டி.ஐ.ஜி.விஜயகுமார் தற்கொலை வழக்கு - 8 பேருக்கு சம்மன்  காவல்துறை
    விபச்சார வழக்கை சாதகமாக முடித்து தருவதற்கு லஞ்சம் வாங்கிய பெண் எஸ்ஐ கைது  திருச்சி

    உச்ச நீதிமன்றம்

    ஸ்டர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்ற தமிழக அரசு முடிவு  தூத்துக்குடி
    வனப் பாதுகாப்பு மசோதா தமிழ் மொழியில் வெளியிடப்படும்: மத்திய அரசு  இந்தியா
    தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் 96வது திருக்குறள் விழா; உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் பங்கேற்பு தென்காசி
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் தொடர்ந்த வழக்குக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025