Page Loader
பூரி ஜகன்னாதர் ரத யாத்திரை கூட்ட நெரிசலில் மூன்று பேர் பலி; சுமார் 50 பேருக்கு காயம்
பூரி ஜகன்னாதர் ரத யாத்திரை கூட்ட நெரிசலில் மூன்று பேர் பலி

பூரி ஜகன்னாதர் ரத யாத்திரை கூட்ட நெரிசலில் மூன்று பேர் பலி; சுமார் 50 பேருக்கு காயம்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 29, 2025
12:10 pm

செய்தி முன்னோட்டம்

ஒடிசாவின் பூரியில் ஜகன்னாதர் ரத யாத்திரையின் போது ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) அதிகாலை ஸ்ரீ கண்டிச்சா கோயில் அருகே ஏற்பட்ட ஒரு துயரமான கூட்ட நெரிசல் போன்ற சூழ்நிலையில் மூன்று பக்தர்கள் பலியாகினர் மற்றும் சுமார் 50 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அதிகாலை 4:30 மணியளவில் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் கோயிலின் முன் கூடியிருந்தபோது நிகழ்ந்தது. ஜெகன்னாதர் தனது தேரில் புனித வருடாந்திர ஊர்வலம் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. சாரதாபலி அருகே கூட்டம் கட்டுக்கடங்காமல் பெருகியதால், தள்ளுமுள்ளு பீதி மற்றும் குழப்பத்திற்கு வழிவகுத்தது. பல பக்தர்கள் சமநிலையை இழந்து விழுந்தனர், இதனால் திடீரென ஏற்பட்ட நெரிசல் உயிரிழப்புக்கு வழிவகுத்தது.

விபரங்கள்

உயிரிழந்தவர்களின் விபரங்கள்

இறந்தவர்கள் பிரபாதி தாஸ், பசந்தி சாஹு மற்றும் 70 வயதான பிரேமகாந்த் மகாந்தி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அனைவரும் குர்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக பூரி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த துயரத்திற்கு போதுமான கூட்டக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இல்லாததே காரணம் என்று நேரில் கண்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மோசமான போக்குவரத்து மேலாண்மை மற்றும் தெளிவான வெளியேறும் பாதை இல்லாதது நெரிசலுக்கு வழிவகுத்ததாக உள்ளூர்வாசி சுவாதின் குமார் பாண்டா குற்றம் சாட்டினார். விஐபி வழித்தடங்கள் மற்றும் கோயிலுக்கு அருகில் அங்கீகரிக்கப்படாத வாகனங்களை தவறாக நிர்வகிப்பது நிலைமையை மேலும் மோசமாக்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.