NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் இணையதளத்தை பயன்படுத்தி ஸ்டாம்ப் போதை பொருள் விற்பனை - 4 பேர் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் இணையதளத்தை பயன்படுத்தி ஸ்டாம்ப் போதை பொருள் விற்பனை - 4 பேர் கைது
    சென்னையில் இணையதளத்தை பயன்படுத்தி ஸ்டாம்ப் போதை பொருள் விற்பனை - 4 பேர் கைது

    சென்னையில் இணையதளத்தை பயன்படுத்தி ஸ்டாம்ப் போதை பொருள் விற்பனை - 4 பேர் கைது

    எழுதியவர் Nivetha P
    Mar 04, 2023
    11:31 am

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் வாடகை வீடு எடுத்து சூரிய ஒளி படமால் சொட்டுநீர் பாசனம் செய்து எல்ஈடி விளக்குகள், ஏசி, மின்விசிறி உள்ளிட்ட அனைத்து வசதிகளை செய்து கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்து வந்த பொறியாளர், ரயில்வே ஊழியர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.

    மேலும் இது குறித்த விசாரணையில் கேளிக்கை விடுதிகளில் வெளிநாடுகளில் இருந்து கிரிப்டோகரன்சி மூலமாக டார்க் வெப்சைட்டுகளில் போதை ஸ்டாம்புகளை வாங்கி விற்பனை செய்து வருவதும் தெரிய வந்துள்ளது.

    இதனை கண்டறிய பட்டாளம் பகுதியை சேர்ந்த நரேந்திர குமார் என்பவரிடம் எல்எஸ்டி ஸ்டாம்ப் போதை பொருளை வாங்குபவர் போல தனிப்படை போலீசார் ஒருவர் நடித்துள்ளார்.

    ஒரு ஸ்டாம்பின் விலை 1,200 என பத்து ஸ்டாம்புகள் 1,20,000க்கு விலைபேசப்பட்டுள்ளது.

    பொறியாளராக பணிபுரிந்த நபர்

    இணையதளம் மூலம் கஞ்சா செடி வளர்க்க பயிற்சி

    பின்னர் பணத்தை வாங்கி கொண்டு ஸ்டாம்ப்க்களை கொடுக்கும் போது, மறைந்திருந்த போலீசார் இரண்டு பேரினை கைது செய்துள்ளனர்.

    அவர்களுள் ஒருவரான ஷ்யாம் என்பவரை விசாரித்ததில் மாடம்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் சக்திவேல் தான் இவர்களுக்கு போதை பொருள்களை விநியோகம் செய்வது தெரியவந்துள்ளது.

    முக்கிய நபரான சக்திவேலையும் போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் சக்திவேல் ஒரு பொறியாளர் என்பதும், இணையத்தளம் குறித்த நல்ல அறிவினை கொண்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.

    யூடியூப் மூலம் கஞ்சா செடி வளர்ப்பது குறித்தும், ஸ்டாம்ப் போதை பொருள் குறித்த விவரங்களையும் தெரிந்து கொண்ட இவர் ரயில்வே ஊழியரான ஷ்யாம், நரேந்திர குமார் மற்றும் ஸ்ரீ காந்த் ஆகியோர் மூலம் இவற்றை விற்பனை செய்து வந்ததும் அம்பலமாகியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    சமூக வலைத்தளம்

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    சென்னை

    சென்னை விமான நிலையத்தில் 3 பழைய விமானங்களை அகற்ற விமானநிலைய ஆணையம் உத்தரவு விமானம்
    சென்னையில் 65 வழித்தடங்களில் மட்டுமே தாழ்த்தள பேருந்துகள் இயக்க வாய்ப்பு - தமிழக அரசு தமிழ்நாடு
    கருணாநிதி நினைவிடத்தில் ரூ.80 லட்ச செலவில் அருங்காட்சியகம்-கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி கருணாநிதி
    தமிழக முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில் திடீர் ஆய்வு செய்தார் தலைமை செயலாளர் இறையன்பு மு.க ஸ்டாலின்

    சமூக வலைத்தளம்

    தமிழகத்தில் புதுவித சைபர் குற்றம் தொடர்பான புகார்கள் - எச்சரிக்கை விடுக்கும் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை
    சித்தமருத்துவர் ஷர்மிகா மீது புகார்-இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டிஸ் மருத்துவ ஆராய்ச்சி
    சித்த மருத்துவர் ஷர்மிகா விசாரணைக்காக கல்லூரி அலுவலகத்தில் நேரில் ஆஜர் சென்னை
    ராஜ்தானி எக்ஸ்பிரஸ் உணவு மிக அருமை! சமூகவியலாளர் சால்வடோர் பாபோன்ஸ் பதிவு! ரயில்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025