NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டதற்கு காரணம் இந்தியா - இலங்கை வெளியுறவு அமைச்சர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டதற்கு காரணம் இந்தியா - இலங்கை வெளியுறவு அமைச்சர்
    இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டதற்கு காரணம் இந்தியா - இலங்கை வெளியுறவு அமைச்சர்

    இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டதற்கு காரணம் இந்தியா - இலங்கை வெளியுறவு அமைச்சர்

    எழுதியவர் Nivetha P
    Mar 09, 2023
    03:06 pm

    செய்தி முன்னோட்டம்

    இலங்கையில் கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

    அதில் அந்நிய செலவாணி இருப்பு குறைந்து, உணவு தானியங்கள், டீசல்,பெட்ரோல் உள்ளிட்டவைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது என்று தகவல்கள் வெளியானது.

    மின்சாரம் கூட நிலையாக இல்லாமல் மக்கள் அவதிக்குள்ளானார்கள்.

    இதனால் இலங்கை மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர், அதிபர் மாளிகையையும் கைப்பற்றினர்.

    எனினும் பல்வேறு திருப்பங்களுக்கு பிறகு தற்போது இலங்கை அதிபராக ரணில் விக்ரம்சிங்க, பிரதமராக தினேஷ் குணவர்த்தன ஆகியோர் பதவி வகிக்கிறார்கள்.

    இந்நிலையில் இலங்கை கடும் நெருக்கடியில் இருந்தபோது, இந்தியா தனது உதவிக்கரத்தினை நீட்டியது.

    அங்குள்ள மக்களுக்கு போதுமான அளவிற்கு உணவு தானியங்கள், உயிர்காக்கும் மருந்துகள், பெட்ரோல்,டீசல் ஆகியவற்றை வழங்கியது.

    தற்போது இலங்கை படிப்படியாக நெருக்கடியில் இருந்து மீண்டுவருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    ரூ.32 ஆயிரம் கோடி நிதியுதவி

    இந்தியாவிற்கு புகழாரம் சூட்டி பேசிய இலங்கை வெளியுறவு அமைச்சர்

    இச்சூழலில் டெல்லியில் அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி கலந்துகொண்டார்.

    அப்போது அவர் செய்தியாளர்களிடன் பேசியபொழுது, கடந்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியது.

    தற்போது சற்று அதிலிருந்து மீண்டு பணவீக்கம் கட்டுக்குள் வந்துள்ளது.

    சர்வதேச செலவாணி நிதியத்தின் நிதியுதவியை எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளார்.

    மேலும், பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீள இந்தியாவே காரணம்.

    மற்ற நாடுகளை விட இந்தியா எங்களுக்கு செய்த உதவி மிக அதிகம். 32 ஆயிரம் கோடி கடனுதவியை இந்தியா எங்களுக்கு வழங்கியுள்ளது என்று அவர் புகழாரம் சூட்டி பேசியுள்ளார்.

    தொடர்ந்து, இந்தியாவிற்கு நாங்கள் நன்றி கடன் பட்டிருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இலங்கை
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இலங்கை

    சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்! விமான சேவைகள்
    திருச்சியில் இலங்கையை சேர்ந்த 9 பேர் கைது! இந்தியா
    ராஜபக்சே சகோதரர்களுக்கு கனடா விதித்த தடை இலங்கைத் தமிழர்கள்
    போலீசாருக்கு எதிராக போராட்டம்: தண்ணீர் பீரங்கி தாக்குதலில் ஷாம்பூ போட்டு குளித்த இலங்கை தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள்

    இந்தியா

    பருவகால சளி மற்றும் இருமலுக்கு, ஆன்டிபயாடிக்குகள் ஒத்து வராது என IMA தெரிவிக்கிறது ஆரோக்கியம்
    இந்தியாவின் முன்னேற்றம் குறித்து அதிக நம்பிக்கை உள்ளது: பில் கேட்ஸ் மோடி
    நாகை கடலில் கலந்த கச்சா எண்ணெய் - செத்து மிதக்கும் மீன்கள் நாகர்கோவில்
    கொரோனா போல் பரவி வரும் H3N2 காய்ச்சல்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கொரோனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025