LOADING...
சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்; அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்; அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 01, 2024
06:46 pm

செய்தி முன்னோட்டம்

திருச்செந்தூரில் முருகப்பெருமான் சூரபதுமனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்வு இந்த ஆண்டு நவம்பர் 7 அன்று நடைபெற உள்ளது. இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது பின்வருமாறு:- 07/11/2024 சூரசம்ஹாரத்தை முன்னிட்டு 06/11/2024 அன்று சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தமிழகத்திலும் மற்றும் அண்டை மாநிலமான பெங்களூரிலிருந்தும் பொது மக்கள் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு அன்று திருச்செந்தூருக்கு சென்று தரிசனம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதன்படி வருகின்ற 07/11/2024 சூரசம்ஹாரம் வருவதால் திருச்செந்தூருக்கு அதிகளவில் மக்கள் பயணிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முன்பதிவு

முன்பதிவு செய்து பயணிக்கலாம்

இதனடிப்படையில் வருகின்ற 06/11/2024 புதன்கிழமை அன்று சென்னை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு. திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருச்செந்தூருக்கு மற்றும் 07/11/2024 திருச்செந்தூரிலிருந்து சென்னை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு. திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது . மேற்கூறிய இடங்களிருந்து அரசு போக்குவரத்துக் கழகத்தின் வலைதளமான www.tnstc.in மற்றும் அதிகாரப்பூர்வ செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது . இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

அரசு போக்குவரத்துக் கழகத்தின் அறிக்கை

Advertisement