ஸ்பெயின் பெண்மணி கற்பழிக்கபட்ட விவகாரத்தில் பாடகி சின்மயி காட்டம்
ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் ஸ்பெயின் சுற்றுலாப் பயணி ஒருவரைக் கூட்டுப் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் பாடகி சின்மயி. இந்த சம்பவத்தால் அனைத்து இந்தியர்களும் வெட்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த வெள்ளிக்கிழமை, தனது கணவருடன் தற்காலிக கூடாரத்தில் தங்கியிருந்தபோது, 7 நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த ஸ்பெயின் ஜோடி, மோட்டார் சைக்கிள்களில் பங்களாதேஷில் இருந்து தும்காவை அடைந்து, பின்னர் நேபாளம் நோக்கி சென்று கொண்டிருந்தது. சின்மயி, "ஒரு சில இந்தியர்கள் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் போது அனைத்து இந்தியர்களும் பெருமைப்பட முடியும் என்றால், சில ஆண்கள் கற்பழிக்கும்போது அனைத்து இந்தியர்களும் வெட்கப்பட வேண்டும்." என்று கூறியுள்ளார்