LOADING...
ரயில் நிலையங்களில் ரீல்ஸ் எடுப்பவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்: ரயில்வே அதிகாரிகள் எச்சரிக்கை
ரயில் நிலையங்களில் ரீல்ஸ் எடுப்பவர்களுக்கு ரூ.1,000 அபராதம்

ரயில் நிலையங்களில் ரீல்ஸ் எடுப்பவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்: ரயில்வே அதிகாரிகள் எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Jul 24, 2025
06:14 pm

செய்தி முன்னோட்டம்

சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் பாராட்டுகளைப் பெறும் நோக்கத்தில் ரீல்ஸ் வீடியோக்கள் எடுக்கும் பழக்கம் தற்போது பெரும் பரவலாக உள்ளது. குறிப்பாக ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளங்களில் ஆபத்தான முறையில் வீடியோக்கள் எடுக்கப்படுவதால், மக்கள் உயிருக்கு நேரும் அபாயங்களைத் தவிர்க்க ரயில்வே துறை கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரயில் நிலையங்களில் வீடியோ எடுப்பவர்களுக்கு எதிராக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ரயில் நிலையங்களில் மொபைல் போனில் வீடியோ எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. பொதுவாக புகைப்படங்கள் எடுக்க அனுமதி இருப்பினும், ரீல்ஸ் வீடியோக்கள் எடுப்பது விதிக்கு எதிரானது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அபராதம்

மீறுபவர்களை கண்கணிக்க CCTV, மற்றும் அபராதம் விதிக்கப்படும் 

ரயில்வேயின் இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றவாளிகளை பிடிக்க, CCTV கேமராக்கள், ரயில்வே போலீசார், பாதுகாப்பு படையினர் ஆகியோர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி ரீல்ஸ் எடுப்பவர்களை அந்த இடத்திலேயே கைது செய்யவும் முடிவெடுத்திருப்பதாக என்பதும் அதிகாரிகளின் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இளைஞர்கள் பலர், ஓடும் ரயிலின் படிகளில் தொங்குதல், தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு சாகச வீடியோ எடுப்பது உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவே இந்த கடுமையான நடவடிக்கை என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.