NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் பதற்றம் - என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 ரவுடிகள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் பதற்றம் - என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 ரவுடிகள் 
    சென்னையில் பதற்றம் - என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 ரவுடிகள்

    சென்னையில் பதற்றம் - என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 ரவுடிகள் 

    எழுதியவர் Nivetha P
    Aug 01, 2023
    11:50 am

    செய்தி முன்னோட்டம்

    சென்னை தாம்பரம் அருகேயுள்ள கூடுவாஞ்சேரி பகுதியில் இன்று(ஆகஸ்ட்.,1)அதிகாலை வாகனத்தணிக்கையில் போலீசார் உதவி ஆய்வாளர் முருகேசன் தலைமையில் ஈடுபட்டிருந்துள்ளனர்.

    அப்போது அவ்வழியாக வேகமாக ஸ்கோடா கார் ஒன்று வந்துள்ளது.

    அதனைத்தடுத்து நிறுத்த போலீசார் முயற்சி செய்ததையடுத்து, நிற்காமல் வேகமாக சென்ற அந்த கார் காவல்துறை வாகனம்மீது மோதி நின்றுள்ளது.

    அதில் மொத்தம் 4 பேர் வந்திருந்தநிலையில், 2 ரவுடிகள் மட்டும் ஆயுதங்களுடன் கீழேயிறங்கி போலீசாரை தாக்கத்துவங்கியதாக கூறப்படுகிறது.

    இந்த தாக்குதலில் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் கையில் வெட்டுப்பட்டுள்ளது.

    இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

    அப்போது காரிலிருந்த மற்ற இருவர் தப்பியோடியதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட 2 ரவுடிகளுக்கும் காயம் ஏற்பட்டது.

    அவர்களை போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.

    என்கவுண்டர் 

    சுட்டுக்கொல்லப்பட்ட இருவரும் ஓட்டேரி காவல்நிலையத்தின் பதிவேடு குற்றவாளிகள்

    ஆனால் அவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    தற்போது இவர்கள் உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    இச்சம்பவத்தில் உயிரிழந்த ரவுடிகள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் சோட்டா வினோத்,ரமேஷ் என்றும், இவர்கள் ஓட்டேரி காவல்நிலையத்தின் பதிவேடுக்குற்றவாளிகள் என்பதும் தெரியவந்துள்ளது.

    மேலும் வினோத் மீது 15 கொலைமுயற்சி வழக்குகள், 10 கொலை வழக்குகள் உள்ளிட்ட பல வழக்குகள் பதிவாகியுள்ளது.

    அதேபோல் ரமேஷ் மீது 7 கொலைமுயற்சி வழக்கு, 5 கொலைவழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் பதிவாகியுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இச்சம்பவத்தில் காயமடைந்த ஆய்வாளர் சிவகுருநாதன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

    போலீசார் தங்கள் உயிரினை தற்காத்துக்கொள்ளவே இந்த துப்பாக்கிச்சூட்டினை நடத்தியதாக காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    காவல்துறை
    காவல்துறை
    துப்பாக்கி சூடு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சென்னை

    சென்னை எழிலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியதில் ரூ.2.14 லட்சம் பறிமுதல்  தமிழ்நாடு
    ஆகஸ்ட் 12ம்தேதி முதல் 15ம்தேதி வரை, மகாபலிபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா  மகாபலிபுரம்
    நில அபகரிப்பு வழக்கில் கைதான அமைச்சர் பொன்முடி விடுதலை  தமிழ்நாடு
    போலி மாதாந்திர பால் அட்டைகளை அகற்ற நடவடிக்கை - ஆவின் நிறுவனம் ஆவின்

    காவல்துறை

    பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தின் மேல் பறந்த மர்ம ட்ரோன்; டெல்லி போலீஸ் விசாரணை  நரேந்திர மோடி
    ஜானி பேர்ஸ்டோவின் சர்ச்சை அவுட்டை வைத்து காவல்துறை வித்தியாசமான பிரச்சாரம் ஆஷஸ் 2023
    மத்திய ஆயுத போலீஸ் படைகளுக்கு புதிய சீருடைகள் அறிவிப்பு  காவல்துறை
    நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த 4 எய்ம்ஸ் கல்லூரி மாணவர்கள் கைது  நீட் தேர்வு

    காவல்துறை

    மத்தியப் பிரதேசம்: பழங்குடியின நபர் மீது சிறுநீர் கழித்தவர், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது  மத்திய பிரதேசம்
    திருப்பத்தூரில் போலி மருத்துவரிடம் ஊசி போட்டுக்கொண்ட 13 வயது சிறுவன் பரிதாப பலி  தமிழ்நாடு
    வேங்கைவயல் விவகாரம் - மறுப்பு தெரிவித்த 8 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் சேகரிப்பு  வேங்கை வயல்
    மெக்சிகோவில் 27 உயிர்களை காவு வாங்கிய பேருந்து விபத்து மெக்சிகோ

    துப்பாக்கி சூடு

    பிபா மகளிர் உலகக்கோப்பை : கால்பந்து அணிகள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே துப்பாக்கிச் சூடு கால்பந்து
    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிளால் 4 பேர் சுட்டுக் கொலை ரயில்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025