Page Loader
குவைத் யோகா பயிற்சியாளருக்கு பத்மஸ்ரீ விருது; யார் இந்த ஷேக்கா ஏஜே அல் சபா?
குவைத் யோகா பயிற்சியாளர் ஷேக்கா ஏஜே அல் சபாவுக்கு பத்மஸ்ரீ விருது

குவைத் யோகா பயிற்சியாளருக்கு பத்மஸ்ரீ விருது; யார் இந்த ஷேக்கா ஏஜே அல் சபா?

எழுதியவர் Sekar Chinnappan
Jan 30, 2025
09:05 am

செய்தி முன்னோட்டம்

குவைத்தின் யோகா பயிற்சியாளர் ஷேக்கா ஏஜே அல் சபாவுக்கு இந்தியாவின் மூன்றாவது உயரிய குடிமகன் விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. ஷேக்கா தனது யோகா பயணத்தை 2001 இல் தொடங்கினார். 2014 இல், தரத்மா என்ற பெயரில் குவைத்தில் முதல் உரிமம் பெற்ற யோகா ஸ்டுடியோவை நிறுவினார். தராத்மா என்ற பெயர் அரபு வார்த்தையான 'தர்' (வீடு) மற்றும் சமஸ்கிருத வார்த்தையான 'ஆத்மா' (ஆன்மா) ஆகியவற்றின் கலவையாகும். வளைகுடா பிராந்தியத்தில் யோகாவை அதன் தனித்துவமான பாரம்பரிய முறைகளுடன் ஊக்குவிப்பதற்காக அவரது சிறப்பு பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. யோகா பயிற்சியாளரான ஷேக்கா யோகாவை ஊக்குவிப்பதில் அவர் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டி இந்திய அரசால் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சேவை

வீடற்ற மக்களுக்கு நிதி திரட்டுவதில் முக்கிய பங்கு

யோகா தவிர, 2021 ஆம் ஆண்டில், அவர் யோம்னக் லில் ஏமன் திட்டத்தை வழிநடத்தினார். இதன் மூலம் ஏமன் அகதிகள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவி நிதி திரட்டுவதில் முக்கிய பங்கு வகித்தார். கடந்த டிசம்பரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி குவைத் சென்றிருந்தபோது, அவரை சந்திக்கும் வாய்ப்பையும் ஷேக்கா ஏஜே அல் சபா பெற்றார்.

யார் இவர்?

ஷேக்கா ஏஜே அல் சபா யார்?

அரச குடும்பத்தைச் சேர்ந்த ஷேக்கா ஏஜே அல் சபா வழக்கறிஞர், தொழிலதிபர் மற்றும் மனித உரிமை ஆர்வலர் என அறியப்படுகிறார். சர்வதேச யோகா தினத்தையொட்டி குவைத் தூதரகம் ஏற்பாடு செய்துள்ள யோகா நிகழ்ச்சிகளில் ஷேக்கா அடிக்கடி பங்கேற்பார். ஷேக்கா அலி அல் ஜாபர் அல் சபாவுக்கு விருது என்பது யோகாவுக்கான உலகளாவிய அங்கீகாரமாகும். இது இந்தியாவிற்கும் குவைத்துக்கும் இடையிலான வலுவான உறவுகளை எடுத்துக்காட்டுகிறது.