NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் காலமானார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் காலமானார்
    முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் தனது 75வது வயதில் காலமானார்

    முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் காலமானார்

    எழுதியவர் Sindhuja SM
    Jan 13, 2023
    11:45 am

    செய்தி முன்னோட்டம்

    ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவ் நேற்று(ஜன:13) காலமானார். இந்த செய்தியை அவரது மகள் சுபாஷினி ஷரத் யாதவ் ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.

    ஜேபி இயக்கத்தின் முக்கிய முகங்களில் ஒருவரான ஷரத் யாதவ் சில உடல்நலப் பிரச்சினைகளால் குருகிராமில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    75 வயதான இவர், நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    மூன்று முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சரத் யாதவ், ஏழு முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

    குருகிராமில் உள்ள ஃபோர்டிஸ் நினைவு ஆராய்ச்சி நிறுவனம் இதற்கு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    பிரதமர் மோடி

    மருத்துவமனையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    சரத் யாதவை அவசர சிகிச்சை பிரிவிற்கு அழைத்து செல்லும் போதே அவருக்கு சுய நினைவு இல்லை என்பதை மருத்துவமனை கூறி இருக்கிறது.

    மேலும், "பரிசோதனையில், அவருக்கு நாடித்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் இல்லாதது தெரிய வந்தது. ACLS நெறிமுறைகளின்படி, அவருக்கு CPR அளிக்கப்பட்டது. அப்போது, எவ்வளவோ முயற்சி செய்தும், அவரை உயிர்ப்பிக்க முடியவில்லை. இரவு 10.19 மணிக்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது." என்றும் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    "சரத் யாதவ் அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது. தனது நீண்ட பொது வாழ்வில், எம்.பி, அமைச்சர் என தனித்து விளங்கியவர் அவர். நாங்கள் பேசிக்கொண்ட கருத்துக்களை நான் எப்போதும் மறக்கமாட்டேன். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்." என்று பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மோடி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    சாட்ஜிபிடியும் பிரியாணியும்: மைக்ரோசாஃப்ட்டின் சத்யா நாதெல்லா பகிர்ந்த வேடிக்கை சம்பவம் தொழில்நுட்பம்
    அடுத்த வருடம் BSNL 5ஜி சேவை தொடங்கப்படும்: மத்திய அமைச்சர்! பிஎஸ்என்எல்
    மதிய உணவு திட்டத்தில் சிக்கன் மற்றும் பழங்கள்: மேற்கு வங்க அரசு! இந்தியா
    உலகின் 3வது பெரிய வாகன சந்தை: ஜப்பானை பின்னுக்குத் தள்ளிய இந்தியா வாகனம்

    மோடி

    PM கேர்ஸ் நலத்திட்டம் ஆரம்பித்து 2 ஆண்டுகளில் 13,000 கோடி வசூல்! இந்தியா
    நரிக்குறவர், குருவிக்காரர் சாதிகள் பழங்குடியினர் பட்டியலில் சேரப்போகிறதா? ஸ்டாலின்
    பிரதமர் மோடி பிறந்த ஊருக்கு உலகப் பாரம்பரிய நகரம் என்ற தகுதி! இந்தியா
    இலவச ரேஷன் திட்டம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு! பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025