NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / செந்தில் பாலாஜி விவகாரம் - ஆளுநர் முடிவு 2 நாட்களுக்குள் தெரிவிக்கப்படும் என தகவல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    செந்தில் பாலாஜி விவகாரம் - ஆளுநர் முடிவு 2 நாட்களுக்குள் தெரிவிக்கப்படும் என தகவல் 
    செந்தில் பாலாஜி விவகாரம் - ஆளுநர் முடிவு 2 நாட்களுக்குள் தெரிவிக்கப்படும் என தகவல்

    செந்தில் பாலாஜி விவகாரம் - ஆளுநர் முடிவு 2 நாட்களுக்குள் தெரிவிக்கப்படும் என தகவல் 

    எழுதியவர் Nivetha P
    Jul 01, 2023
    05:16 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை என 2 இலக்காக்கள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

    ஆனால், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை அண்மையில் அவரை கைது செய்தது.

    அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தினால் தற்போது பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.

    இவருக்கு புழல் சிறையில் கைதிக்கான எண் கொடுக்கப்பட்டுள்ளதோடு, மருத்துவமனையில் காவல்துறையின் பாதுகாப்பும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த 2 இலக்காக்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டதையடுத்து, செந்தில் பாலாஜி இலாகா இல்லா அமைச்சராக தொடர்வார் என்று தமிழகஅரசு அறிவித்தது.

    ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குகள் உள்ளதால் அவரை பதவி நீக்கம் செய்வதாக உத்தரவிட்டார்.

    ஆளுநர் 

    அட்டர்னி ஜெனரலுக்கு கடிதம் எழுதிய ஆளுநர் 

    இதற்கு பல தரப்புகளிலிருந்து ஆளுநருக்கு எதிர்ப்புகள் வந்த நிலையில், இவ்விவகாரம் அமித்ஷாவிற்கு தெரியவந்தது.

    அப்போது,அவர் ஆளுநரை தலைமை வழக்கறிஞரிடம் கருத்துக்கேட்டு முடிவெடுக்குமாறு அறிவுத்தியுள்ளார்.

    இதன்பின்னர் தனது உத்தரவினை நிறுத்திவைப்பதாக தெரிவித்த ஆளுநர், அமித்ஷா கூறியபடி அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணியிடம் கருத்துக்கேட்க முயற்சி செய்துள்ளார்.

    ஆனால் வெங்கட்ரமணி தற்போது கேரளாவில் உள்ளார், வரும் திங்கட்கிழமைத்தான் டெல்லிக்கு வருவார் என்று தெரியவந்துள்ளது.

    இதனால் ஆளுநர்,தான் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ள சட்டப்பிரிவுகளின் விதிமுறைகள் உள்ளிட்ட விவரத்தினை ஓர் கடிதமாக எழுதி வெங்கட்ரமணிக்கு அனுப்பிவைத்துள்ளார்.

    வரும் திங்கள் அந்த கடிதத்தின் மீதான தனது கருத்தினை அட்டர்னி ஜெனரல் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதன்பின்னர் தான்,ஆளுநர் எடுத்த முடிவினை நிரந்தரமாக திருப்பி பெறுவாரா இல்லையா?என்பதும் தெரிவிக்கப்படும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆர்.என்.ரவி
    தமிழ்நாடு

    சமீபத்திய

    லாகூரில் நடந்த விபத்தில் LeT இணை நிறுவனர் படுகாயம்; ISI பாதுகாப்பில் மருத்துவமனையில் சிகிச்சை லஷ்கர்-இ-தொய்பா
    விவாகரத்து வழக்கில் திருப்பம்: நடிகர் ஜெயம் ரவியிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கோரிய ஆர்த்தி விவாகரத்து
    சத்தீஸ்கர்: பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 27 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர் மாவோயிஸ்ட்
    சென்னையில் போக்குவரத்து அபராதங்களுக்கு புதிய கட்டுப்பாடு: 5 விதிமீறல்களுக்கு மட்டும் அபராதம் சென்னை

    ஆர்.என்.ரவி

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சாமி தரிசனம் சிதம்பரம் கோவில்
    ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின்
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநரின் சர்ச்சை பேச்சு - கனிமொழி ஆவேசம் தமிழ்நாடு
    திமுக கூட்டணி கட்சிகள் ஏப்ரல் 12ம் தேதி ஆளுநர் மாளிகை முன் போராட்டம் ஆளுநர் மாளிகை

    தமிழ்நாடு

    பொறியியல் மாணவர் சேர்க்கை விதிகளில் மாற்றம் தமிழகம்
    தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை தமிழகம்
    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செயற்கை சுவாசம் - காவேரி மருத்துவமனை  செந்தில் பாலாஜி
    செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு விசாரணை ஒத்திவைப்பு  மின்சார வாரியம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025