NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழிசை சௌந்தராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழிசை சௌந்தராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார்
    குமரி அனந்தன் வயது மூப்பினால் சென்னையில் காலமானார்

    காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழிசை சௌந்தராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 09, 2025
    07:56 am

    செய்தி முன்னோட்டம்

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் இன்று அதிகாலை வயது மூப்பினால் சென்னையில் காலமானார்.

    பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையான 93 வயதான குமரி ஆனந்தனுக்கு சமீபத்தில் தமிழ்நாடு அரசின் சார்பாக தகைசால் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    அவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பல தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இது குறித்து தமிழிசை தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை... தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்று.... பெருமையாக . பேச வைத்த என் தந்தை திரு.குமரி அனந்தன் அவர்கள்... இன்று என் அம்மாவோடு.. இரண்டர கலந்து விட்டார்..." என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை... தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்று.... பெருமையாக . பேச வைத்த என் தந்தை திரு.குமரி அனந்தன் அவர்கள்... இன்று என் அம்மாவோடு.. இரண்டர கலந்து விட்டார்... குமரியில்.. ஒரு கிராமத்தில் பிறந்து.. தன் முழு முயற்சியினால்...… pic.twitter.com/MxDWOHg5OJ

    — Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) April 8, 2025

    வாழ்க்கை

    குமரி மாவட்டத்தின் MP மற்றும் MLA வாக இருந்தவர் குமரி அனந்தன் 

    குமரி அனந்தன் சிறந்த இலக்கியவாதி மற்றும் அரசியல்வாதி.

    பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையும், மறைந்த எம்பி வசந்தகுமாரின் அண்ணனுமான குமரி ஆனந்தன் வயது மூப்பு காரணமாக தீவிர அரசியலிருந்து ஒதுங்கியிருந்தார்.

    சிறுநீர் பிரச்சினைகளால் சிகிச்சை பெற்று வந்தார்.

    குமரி அனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகப் பணியாற்றியவர்.

    5 முறை எம்.எல்.ஏ மற்றும் ஒரு முறை குமரி மாவட்ட எம்பியாகவும் இருந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தின் அகத்தீஸ்வரத்தில் பிறந்தார். அவரது இயற்பெயர் அனந்தகிருஷ்ணன்.

    தமிழ் மொழி ஆர்வம் காரணமாக தமிழ் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை முடித்த இவர் சிறந்த மேடை பேச்சாளர்.

    பெருந்தலைவர் காமராஜருடன் இணைந்து பணியாற்றிய பெருமை கொண்டவர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காங்கிரஸ்
    தமிழிசை சௌந்தரராஜன்
    பாஜக

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    காங்கிரஸ்

    இந்தியாவிற்கு எதிரான காங்கிரசின் அருவருப்பு அரசியல்; ஹிண்டன்பர்க் குறித்து முன்னாள் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கருத்து செபி
    காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் வினேஷ் போகட்
    'இட ஒதுக்கீடு விவகாரத்தில் எனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது'; ராகுல் காந்தி விளக்கம் ராகுல் காந்தி
    'இந்தியாவை அவமதித்த ராகுல் காந்தி': மூதறிஞர் ராஜாஜியின் கொள்ளுப் பேரன் குற்றச்சாட்டு ராகுல் காந்தி

    தமிழிசை சௌந்தரராஜன்

    இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் தமிழ்நாட்டில் இருந்து ஏவப்பட்டது இஸ்ரோ
    எங்களை போன்ற திறமையானவர்களை தமிழக மக்கள் அங்கீகரிக்கவில்லை - தமிழிசை செளந்தரராஜன் கோவை
    சித்திரை திருவிழா கொண்டாட்டம் - தமிழிசை சௌந்தரராஜன் உற்சாகம்  புதுச்சேரி
    33% இடஒதுக்கீடு காரணமாக புதுச்சேரி சட்டசபையில் 11 பெண் எம்எல்ஏ'க்கள் - தமிழிசை பிரதமர் மோடி

    பாஜக

    மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக கூட்டணி; அடுத்த முதல்வர் யார்? மகாராஷ்டிரா
    ஹெச்.ராஜா குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு; 6 மாதம் சிறை தண்டனை சிறை
    தொடர்ந்து சஸ்பென்ஸில் உள்ள மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் பெயர்; டிசம்பர் 4ஆம் தேதி அறிவிக்கப்படும் மகாராஷ்டிரா
    பாஜக-காங்கிரஸ் மோதலுக்கு இடையே இன்று மக்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதம் நடைபெறும் மக்களவை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025