LOADING...
9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 06, 2025
08:56 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் காரணமாக இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று பின்வரும் 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று IMD தெரிவித்துள்ளது. அரியலூர் பெரம்பலூர் திருச்சி கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி திருப்பத்தூர் இந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

வானிலை

வானிலை முன்னறிவிப்பு 

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று, அதிகாலை முதல் தொடர் கனமழை பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்புக் கருதி, மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி \அனைத்துப் பள்ளிகளுக்கும் மட்டும் விடுமுறை அறிவித்துள்ளார். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிககளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மழைப்பொழிவு, தமிழக உள் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக ஏற்பட்டதாகும்.