NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாமக்கல் மாவட்டத்தில் மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாமக்கல் மாவட்டத்தில் மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது 
    நாமக்கல் மாவட்டத்தில் மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது

    நாமக்கல் மாவட்டத்தில் மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது 

    எழுதியவர் Nivetha P
    Apr 13, 2023
    01:12 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலம், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுக்கா-கீரம்பூரில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் இப்பள்ளியில் சமூகஅறிவியல் ஆசிரியராக பணிபுரிபவர் பன்னீர் செல்வம்.

    இவர் மாணவிகளை தனது செல்போனில் ஆபாசமாக போட்டோ மற்றும் வீடியோக்கள் எடுத்து, தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

    இவரால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் இதுகுறித்து கூறியநிலையில் நேற்று(ஏப்ரல்.,12) காலை 50க்கும்மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளிக்கு முன் முற்றுகையிட்டு அந்த ஆசிரியர் பன்னீர் செல்வம் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் பள்ளித்தலைமை ஆசிரியர் சர்மிளா பாதுகாப்பு கருதி ஆசிரியர் பன்னீர் செல்வத்தை ஓர் அறையில் வைத்து பூட்டிவிட்டு காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.

    பள்ளி ஆசிரியர் 

    பள்ளி கேட்டை மூடி மறியலில் ஈடுபட்ட பெற்றோர்கள் 

    இதனைதொடர்ந்து பரமத்தி போலீசார் அங்கு விரைந்து வந்துள்ளார்கள்.

    மேலும் அம்மாவட்ட எஸ்.பி.மணிமாறன், டிஎஸ்பி கலையரசன் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சதீஷ்குமார் ஆகியோர் பள்ளியில் திரண்டிருந்த பெற்றோர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

    அப்போது பெற்றோர்கள் ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர், கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனடியாக சம்பவயிடத்திற்கு வரவேண்டும் என்று கூறி, பள்ளியின் கேட்டை மூடி மறியலில் ஈடுபட்டுள்ளார்கள்.

    அதன்பின்னர், போலீசார் ஆசிரியரை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

    அதன் பின்னரே, ஆசிரியரை கைதுசெய்து அழைத்து சென்ற போலீஸ் வாகனத்திற்கு அங்கிருந்தோர் வழி விட்டதாக கூறப்படுகிறது.

    இச்சம்பம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    பள்ளி மாணவர்கள்
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தமிழ்நாடு

    தமிழகத்தில் இனி ஆன்லைனில் ஆவின் பொருட்கள் விற்பனை - அமைச்சர் நாசர் சட்டமன்றம்
    கொரோனா அதிகரிப்பு - தினசரி பரிசோதனை எண்ணிக்கையை 11,000ஆக உயர்த்த சுகாதாரத்துறை அறிவுறுத்தல் சுகாதாரத் துறை
    தஞ்சை மண்ணில் பிறந்த நம்மாழ்வார் பிறந்தநாள் இன்று பிறந்தநாள்
    தமிழக மீனவர்கள் 11 பேரை விடுதலை செய்த இலங்கை அரசு மாவட்ட செய்திகள்

    பள்ளி மாணவர்கள்

    சார், மேடம் என்று அழைக்கக்கூடாது: கேரளாவில் உத்தரவு இந்தியா
    இந்திய பணக்காரர்களில் 1% நபர்களிடம், நாட்டின் 40% சொத்து உள்ளது: ஆக்ஸ்ஃபேம் கவலை! இந்தியா
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் குறித்த அரசாணை வெளியீடு தமிழ்நாடு
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான மாணவர் சேர்க்கை - ஆர்டிஈ தமிழ்நாடு

    காவல்துறை

    மாயனூர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகள்-ஆசிரியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் தமிழ்நாடு
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - ஒருவரை கைது செய்த காவல்துறை திருவண்ணாமலை
    புதுச்சேரியில் திடீரென செத்து மடிந்த 400 வாத்துக்கள் - காவல்துறை விசாரணை புதுச்சேரி
    திருநெல்வேலியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஓட்டுநர் உரிமம் ரத்து - ஆர்.டி.ஓக்கு மாநகர போலீசார் பரிந்துரை திருநெல்வேலி

    காவல்துறை

    மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பொதுமக்கள் தரிசனத்திற்கு தடையில்லை மதுரை
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - கொள்ளையர்களை பிடிப்பதில் காவல்துறையினருக்கு திடீர் சிக்கல் திருவண்ணாமலை
    திருச்சியில் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் - பரபரப்பு சம்பவம் திருச்சி
    சென்னையில் பெண் இன்ஸ்பெக்டரை மிரட்டிய போலி ஐஏஎஸ் அதிகாரி தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025