NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஈஷா அறக்கட்டளைக்கு ஆதரவான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஈஷா அறக்கட்டளைக்கு ஆதரவான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம் 
    ஈஷா அறக்கட்டளைக்கு ஆதரவான உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

    ஈஷா அறக்கட்டளைக்கு ஆதரவான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம் 

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 28, 2025
    03:32 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக பிறப்பித்த நோட்டீஸை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் 2022 ஆம் ஆண்டு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

    குறிப்பிட்ட சுற்றுச்சூழல் அனுமதிகள் இல்லாமல் 2006 மற்றும் 2014 க்கு இடையில் அறக்கட்டளையின் கோயம்புத்தூர் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமான நடவடிக்கைகள் தொடர்பான நோட்டீஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    யோகா மற்றும் தியான மையத்திற்கு எதிராக எந்தவொரு கட்டாய நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி என்.கே.சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.

    அனைத்து சட்ட விதிகளையும் கடைப்பிடித்து வருவதாக ஈஷா அறக்கட்டளை கூறியதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், எந்தவொரு எதிர்கால விரிவாக்க பணிகளுக்கும் அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல்களைப் பெற வேண்டும் என்று உத்தரவிட்டது.

    கல்வி நிறுவனம்

    ஈஷா அறக்கட்டளையை கல்வி நிறுவனமாக வகைப்படுத்திய சென்னை உயர்நீதிமன்றம்

    ஈஷா அறக்கட்டளையை ஒரு கல்வி நிறுவனமாக சென்னை உயர்நீதிமன்றம் முன்னர் வகைப்படுத்தியது.

    அதன் அடிப்படையில், மத்திய அரசின் விதிமுறைகளின் கீழ் முன் சுற்றுச்சூழல் அனுமதி தேவைப்படுவதிலிருந்து விலக்கு அளித்தது.

    இந்த வகைப்பாடு அறக்கட்டளையின் யோகா மற்றும் குழு மேம்பாட்டு நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது.

    இதற்கிடையே, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மேல்முறையீட்டில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க தாமதத்தையும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.

    தாமதமான மனுக்களை பரிசீலிக்கும்போது, ​​சாதாரண குடிமக்களை விட வசதி படைத்தவர்களுக்கு ஏன் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியது.

    600 நாட்களுக்கு மேல் தாமதங்கள் வழக்கமாக ஏற்றுக்கொள்ளப்பட்டால், அது நீதித்துறை செயல்பாட்டில் ஏற்றத்தாழ்வை உருவாக்கும் என்று நீதிபதி சூர்யா காந்த் குறிப்பிட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஈஷா யோகா
    உச்ச நீதிமன்றம்
    சென்னை உயர் நீதிமன்றம்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஈஷா யோகா

    சுபஸ்ரீ மரணம்: ஈஷா யோகா மையம் கண்டனம் தமிழ்நாடு
    'மண் காப்போம்' இயக்கம் குறித்து விழிப்புணர்வு - பிரான்சில் இருந்து கோவைக்கு சைக்கிளில் வந்த பெண் கோவை
    இன்று கோவை வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தமிழ்நாடு
    கோவை ஈஷாவில் 'தமிழ் தெம்பு - தமிழ் மண் திருவிழா' கோலாகல கொண்டாட்டம் கோவை

    உச்ச நீதிமன்றம்

    தேர்தல் பத்திரங்களைங் காட்டி மிரட்டியதாக புகார்; மத்திய நிதியமைச்சர் மீது பெங்களூரில் எஃப்ஐஆர் பதிவு நிர்மலா சீதாராமன்
    'கடவுள்களை அரசியலில் இருந்து ஒதுக்கி வைக்கவும்...': திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கண்டனம் திருப்பதி
    ஈஷா அறக்கட்டளை மீதான நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை; காவல்துறைக்கு அதிரடி உத்தரவு ஈஷா யோகா
    திருப்பதி லட்டு விவகாரம்: சிபிஐ மேற்பார்வையில் எஸ்ஐடி விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு திருப்பதி

    சென்னை உயர் நீதிமன்றம்

    ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் நேரடி ஒளிபரப்பு கோரிக்கைகளை நிராகரிக்க கூடாது: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு ராமர் கோயில்
    சாதி மதமற்றவர் சான்றிதழ் வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை: உயர்நீதிமன்றம் வழக்கு
    சாந்தன் இலங்கை செல்ல ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும்: மத்திய அரசு தகவல் இலங்கை
    தனியார் பேருந்துகளில் அதிக கட்டண வசூல் விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு பேருந்துகள்

    தமிழ்நாடு

    தமிழக அரசுடன் ஆளுநர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் கருத்து உச்ச நீதிமன்றம்
    உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 6) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025