NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஈஷா அறக்கட்டளை மீதான நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை; காவல்துறைக்கு அதிரடி உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஈஷா அறக்கட்டளை மீதான நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை; காவல்துறைக்கு அதிரடி உத்தரவு
    ஈஷா அறக்கட்டளை மீதான நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை

    ஈஷா அறக்கட்டளை மீதான நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை; காவல்துறைக்கு அதிரடி உத்தரவு

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 03, 2024
    05:05 pm

    செய்தி முன்னோட்டம்

    சத்குரு ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து குற்ற வழக்குகள் தொடர்பாகவும் தமிழக காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    அறக்கட்டளை சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி கோரிய அவசர விசாரணையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, இரண்டு பெண்களை அறக்கட்டளை வலுக்கட்டாயமாக தடுத்து வைத்தது தொடர்பான ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து தனக்கு மாற்றியுள்ளது.

    இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு இரண்டு பெண்களிடமும் வீடியோ கான்பரன்சிங் மூலம் தனிப்பட்ட முறையில் விசாரிக்கப்பட்டது.

    நடவடிக்கை நிறுத்தம்

    காவல்துறை நடவடிக்கையை நிறுத்தியது உச்ச நீதிமன்றம்

    உச்ச நீதிமன்ற விசாரணையில், கடந்த எட்டு ஆண்டுகளாக தங்கள் தந்தை தங்களை துன்புறுத்துவதாக ஒரு பெண் கூறினார்.

    இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    மாறாக, நிலை அறிக்கையை நேரடியாக தமக்கே சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் தனது மகள்களை சத்குரு ஜக்கி வாசுதேவ் மூளைச் சலவை செய்து நிரந்தரமாக வாழ வைத்ததாகக் கூறி ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    அறக்கட்டளை இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தது. மகள்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் காரணமாக மையத்தில் வாழ்வதாக தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஈஷா யோகா
    சத்குரு
    கோவை
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    மழை பெய்யும்போது ஜொமாட்டோ, ஸ்விக்கியில் ஆர்டர் செய்பவரா நீங்கள்? அதிக டெலிவரி சார்ஜசிற்கு தயாராகுங்கள் ஸ்விக்கி
    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19
    சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல் ஏர்டெல்
    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா

    ஈஷா யோகா

    சுபஸ்ரீ மரணம்: ஈஷா யோகா மையம் கண்டனம் தமிழ்நாடு
    'மண் காப்போம்' இயக்கம் குறித்து விழிப்புணர்வு - பிரான்சில் இருந்து கோவைக்கு சைக்கிளில் வந்த பெண் கோவை
    இன்று கோவை வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தமிழ்நாடு
    கோவை ஈஷாவில் 'தமிழ் தெம்பு - தமிழ் மண் திருவிழா' கோலாகல கொண்டாட்டம் கோவை

    சத்குரு

    நிதீஷ்குமாரின் "ஹிந்தி தேசிய மொழி" பேச்சுக்கு சத்குரு கண்டனம் டெல்லி
    சத்குரு ஜக்கி வாசுதேவிற்கு மூளையில் ரத்தக்கசிவு; டெல்லி மருத்துவமனையில் அவசர அறுவைசிகிச்சை டெல்லி

    கோவை

    கோவை-திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் சேவை  திண்டுக்கல்
    கோவையில் பதற்றம் - பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என மிரட்டல் இமெயில் தீபாவளி
    தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பதவியிலிருந்து திருப்பூர் சுப்பிரமணியம் விலகல் தமிழ்நாடு
    காலணியை துடைக்க வைத்து இஸ்லாமிய மாணவியை இழிவுபடுத்திய ஆசிரியை: கோவையில் பரபரப்பு  இஸ்லாம்

    உச்ச நீதிமன்றம்

    ஜாமீன் தடையை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது டெல்லி
    NEET: 'சீரற்ற' மதிப்பெண்கள் கணக்கீடு தொடர்பாக NTAக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம் நீட் தேர்வு
    கோடை விடுமுறையின் போது, 1,170 வழக்குகளை தீர்த்து வைத்தது உச்ச நீதிமன்றம் டி.ஒய்.சந்திரசூட்
    பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கினால் வேலைவாய்ப்பு கிடைப்பதில் பிரச்சனை ஏற்படலாம்: உச்ச நீதிமன்றம்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025