NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து  விவரங்களையும் வெளியிட வேண்டும்': எஸ்பிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து  விவரங்களையும் வெளியிட வேண்டும்': எஸ்பிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு 

    'தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து  விவரங்களையும் வெளியிட வேண்டும்': எஸ்பிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 18, 2024
    11:33 am

    செய்தி முன்னோட்டம்

    தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளியிடுமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு(எஸ்பிஐ) உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

    தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தேர்தல் பத்திரங்களின் முக்கிய பாதுகாப்பு அம்சமான தேர்தல் பத்திர எண்களை வெளியிடுமாறு எஸ்பிஐக்கு இன்று உத்தரவிட்டது.

    தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட நன்கொடைகள் குறித்து எஸ்பிஐ வழங்கிய முழுமையற்ற தரவுகளுக்கு எதிரான மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட், "உங்கள் கைவசம் உள்ள தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் வெளியிடப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்." என்று தெரிவித்துள்ளார்.

    எந்த விவரங்களையும் மறைக்கவில்லை என்று ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு எஸ்பிஐயிடம் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

    டெல்லி 

    'எஸ்பிஐயின் அணுகுமுறை சரியில்லை': உச்ச நீதிமன்றம்

    கடந்த மாதம் தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் ஒரு வரலாற்றுத் தீர்ப்பை வழங்கியது.

    குடிமக்களின் தகவல் அறியும் உரிமையை மீறுவதால் இந்த சர்ச்சைக்குரிய தேர்தல் பத்திரத் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

    இந்த பத்திரங்களை வழங்குவதை நிறுத்தவும், இந்த முறையில் அளிக்கப்பட்ட நன்கொடைகளின் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6 ஆம் தேதிக்குள் தெரிவிக்கவும் அப்போது எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    ஆனால், தேர்தல் பத்திரங்களின் முக்கிய பாதுகாப்பு அம்சமான தேர்தல் பத்திர எண்களை எஸ்பிஐ வெளியிடவில்லை.

    இந்நிலையில் இன்று இதுகுறித்து விசாரித்த உச்சநீதிமன்றம், "'நீங்கள் சொன்னால் தான் வெளியிடுவோம்' என்பது போல் எஸ்பிஐ நடந்துகொள்கிறது. அனைத்து விவரங்கள் என்று நாங்கள் சொன்னால் அதில் அனைத்து விவரங்களும் அடங்கும்" என்று கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உச்ச நீதிமன்றம்
    எஸ்பிஐ
    இந்தியா
    தேர்தல் பத்திரங்கள்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    உச்ச நீதிமன்றம்

    பில்கிஸ் பானோ கூட்டு பலாத்கார வழக்கின் 11 குற்றவாளிகள் 2 வாரங்களில் சரணடைய உத்தரவு  குஜராத்
    சொத்துகுவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு சரணடைவதில் இருந்து விலக்கு: உச்ச நீதிமன்றம் பொன்முடி
    அதிமுக விவகாரம்: உச்ச நீதிமன்றத்தால் ஓபிஎஸ்-இற்கு மற்றுமொரு அடி அதிமுக
    உச்ச நீதிமன்ற கெடு முடிவடைந்ததை அடுத்து பில்கிஸ் பானோ குற்றவாளிகள் குஜராத்தில் சரண் குஜராத்

    எஸ்பிஐ

    எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து கோ-பிராண்டட் கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்தும் ரிலையன்ஸ் ரிலையன்ஸ்
    அரசியல் கட்சிகளால் பணமாக்கப்படாத தேர்தல் பத்திரங்கள் திரும்பப் பெறப்படும் தேர்தல் பத்திரங்கள்
    தேர்தல் பத்திரங்கள் பற்றிய தகவல்களை வழங்க கால அவகாசம் கோரியது எஸ்பிஐ  உச்ச நீதிமன்றம்
    தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் எஸ்பிஐயின் கோரிக்கையை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்  டெல்லி

    இந்தியா

    25 தனியார் துறை நிபுணர்களை முக்கிய பதவிகளில் சேர்க்க மோடி அரசு முடிவு  மத்திய அரசு
    ஸ்பெயின் நாட்டு சுற்றுலாப் பயணியை கூட்டுப் பலாத்காரம் செய்த ஜார்கண்ட் ஆசாமிகள் கைது  ஜார்கண்ட்
    'இந்திய ஆப்கள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்படுவதை அனுமதிக்க முடியாது': மத்திய அரசு  கூகுள்
    மத்திய அரசின் தலையீட்டை தொடர்ந்து பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட ஆப்களை மீண்டும் சேர்க்க கூகுள் முடிவு  கூகுள்

    தேர்தல் பத்திரங்கள்

    'வாக்களிக்கும் உரிமைக்கு தகவல் அவசியம்': தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வாக்காளர்
    தேர்தல் பத்திர விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம்; ரூ.1,368 கோடிக்கு பத்திரங்கள் வாங்கிய கோவை தொழிலதிபர் உச்ச நீதிமன்றம்
    தேர்தல் பத்திர எண்களை வெளியிடாத எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் தேர்தல்
    தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த நிதியுதவி குறித்த புதிய தகவல்கள் வெளியானது உச்ச நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025