NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
    ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

    ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 11, 2023
    09:06 am

    செய்தி முன்னோட்டம்

    370வது சட்ட பிரிவை (Article 370) நீக்கி ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் மத்திய அரசின் ஆகஸ்ட் 2019 முடிவு செல்லுபடியாகுமா என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று (டிசம்பர் 11, 2023) தீர்ப்பு வழங்க உள்ளது.

    முன்னதாக 16 நாட்கள் நீடித்த குறுக்கு விசாரணையைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தனஞ்சய ஒய் சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, பூஷன் ஆர் கவாய் மற்றும் சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு செப்டம்பர் 5 ஆம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது.

    card 2

    இரண்டு வித தீர்ப்புகள் மட்டுமே சாத்தியம்

    இந்த வழக்கில் இரண்டு விதமான தீர்ப்புகள் வெளியாகக்கூடும். ஒன்று, அரசின் முடிவு செல்லும் என்பது, அல்லது அரசின் முடிவு மக்களுக்கு எதிரானது என்பது.

    எனினும் ஒரு மனதாக எடுக்கப்பட்டுள்ள தீர்ப்பா என்பதும், அதன் பின்னர் மத்திய அரசின் நடவடிக்கை எப்படி இருக்கும் என்பது குறித்தும் பலரும் இன்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

    குறிப்பாக ஜம்மு காஷ்மீர் மக்கள்!

    மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த வழக்கின் விசாரணை, தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட பின்னர், மீண்டும் இந்தாண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கியது.

    card 3

    விசாரணையின் போது விவாதிக்கப்பட்ட முக்கிய பிரச்சினைகள்

    நிரந்தரத் தன்மை

    இந்த விவகாரத்தின் இறுதிக்கட்ட விசாரணையில், சட்டப்பிரிவு 370ன் நிரந்தரத் தன்மை மற்றும் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து குறித்து வலியுறுத்தும் மனுதாரர்களின் விரிவான வாதங்கள் இடம்பெற்றது.

    இந்தியாவுடன் ஒருங்கிணைப்பதற்கான இறுதி படி

    இதனை எதிர்த்து வாதிட்ட மத்திய அரசும் மற்றும் பிற எதிர்மனுதாரர்களும், இந்த சட்டப்பிரிவு 370 ஏற்பாடு எப்போதுமே தற்காலிகமானதாக இருக்க வேண்டும் என்றும், அதை ரத்து செய்வதே ஜம்மு-காஷ்மீரை, இந்தியாவுடன் முழுமையாக ஒருங்கிணைப்பதற்கான இறுதி படியாகும் என்றும் வலியுறுத்தினர்.

    அரசியலமைப்பு வாக்குறுதி

    நேஷனல் கான்பரன்ஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், காஷ்மீர் குடிமக்கள், முன்னாள் அதிகாரிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை உள்ளடக்கிய மனுதாரர்கள், 370வது பிரிவு சுதேச அரசுக்கு வழங்கப்பட்ட அரசியலமைப்பு வாக்குறுதியின் உருவகம் என்றும் வாதிட்டனர்.

    card 4

    மத்திய அரசின் பதில்

    சிறப்பு அந்தஸ்து கோரும் மனுதாரர்களின் வாதத்தை எதிர்த்து அட்டர்னி ஜெனரல் ஆர் வெங்கடரமணி மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் மத்திய அரசின் சார்பாக வாதாடினர்.

    அவர்கள் கூறியதாவது 370 வது பிரிவு என்பது ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்துக்கான உருவகம் அல்ல என்றும், இந்தியா நாட்டுடன் 'முழுமையான ஒருங்கிணைப்பு'க்கான 'தற்காலிக' ஏற்பாடு மட்டுமே என்றும் கூறினர்.

    அக்டோபர் 1947இல் இந்தியாவுடன் இணைவதற்காக காஷ்மீர் சமஸ்தானத்தின் மகாராஜா ஹரி சிங்கால் கையெழுத்திடப்பட்ட உடன்பாட்டு அறிக்கை என்பது, முற்றிலும் ஒரு அரசியல் நடவடிக்கை என்றும், 370வது பிரிவு "நிலைமையை தற்காலிகமாக நிர்வகிப்பதற்கும், ஜம்மு காஷ்மீரில் ஒருங்கிணைப்பு செயல்முறையை முடிக்க ஒரு நீடித்த கால அவகாசம் மட்டுமே" என்றும் அவர்கள் கூறினர்.

    card 5

    எதிர்கால திட்டங்கள்: தேர்தல்கள் மற்றும் மாநில அந்தஸ்து

    விசாரணையின் முடிவில், அரசியலமைப்பு பெஞ்ச், ஜம்மு & காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதற்கான காலக்கெடு எதுவும் மத்திய அரசிடம் உள்ளதா என்றும் மத்திய அரசிடம் கேட்டது.

    எனினும் அந்த கேள்விக்கு, உறுதியான பதில் எதுவும் கூறாமல், மத்திய அரசு தவிர்த்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    அதேநேரத்தில், ஜே & கே யூனியன் பிரதேசத்திற்கான தேர்தல் பற்றி மாநில மற்றும் மத்திய தேர்தல் ஆணையங்கள் முடிவெடுக்கும் போதெல்லாம் தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறியது.

    ஜே&கே இன் யூனியன் பிரதேச அந்தஸ்து "தற்காலிகமானது" என்று மீண்டும் வலியுறுத்தியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்
    உச்ச நீதிமன்றம்
    மத்திய அரசு

    சமீபத்திய

    பஞ்சாப் கிங்ஸ் அணியின் இயக்குநர்கள் மீது ப்ரீத்தி ஜிந்தா வழக்கு; காரணம் என்ன? பஞ்சாப் கிங்ஸ்
    வடகிழக்கு மாநிலங்களில் அதிகளவு முதலீடு செய்யபோவதாக அம்பானி, அதானி அறிவிப்பு ரிலையன்ஸ்
    மனைவி பிரிந்ததால் விரக்தி; கர்நாடகாவில் திருமணம் செய்து வைத்த தரகரை கொலை செய்த கணவர் கர்நாடகா
    ராகுல் காந்தியின் டெல்லி பல்கலைக்கழக வருகை சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது- என்ன காரணம்? ராகுல் காந்தி

    ஜம்மு காஷ்மீர்

    ஜி20 மாநாட்டை முன்னிட்டு ஸ்ரீநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது இந்தியா
    ஸ்ரீநகரில் விபத்து: பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்தததால் 10 பேர் பலி இந்தியா
    காஷ்மீரில் கட்டப்பட்ட ஏழுமலையான் கோயில் - அமித்ஷா திறந்து வைத்தார்  அமித்ஷா
    தமிழகத்தில் ராணுவ வீரர் மனைவி அரை நிர்வாணமாக்கப்பட்ட சம்பவம் - 2 பேர் கைது  காவல்துறை

    உச்ச நீதிமன்றம்

    26 வார கருவை கலைக்க முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம் இந்தியா
    LGBTQIA+ தம்பதிகளின் உரிமைகளை முடிவு செய்ய குழு அமைக்க உத்தரவு டி.ஒய்.சந்திரசூட்
    LGBTQIA+ தம்பதிகள் குழந்தைகளை தத்தெடுப்பதற்கு ஆதரவாக தீர்ப்பளித்த தலைமை நீதிபதி இந்தியா
    ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்க மறுத்தது உச்ச நீதிமன்றம் இந்தியா

    மத்திய அரசு

    புதுச்சேரி அமைச்சர் நீக்கப்பட்டதற்கு மத்திய அரசு ஒப்புதல் புதுச்சேரி
    சட்டம் பேசுவோம்: ஒரே பாலின திருமண பிரச்சனையில் நீதி தாமதப்படுத்தப்பட்டதா மறுக்கப்பட்டதா? இந்தியா
    ஒடிசா அரசாங்கத்தில் தமிழருக்கு முக்கிய பொறுப்பு ஒடிசா
    கட்டாய இணைய செக் இன்?- பயணிகளின் புகாரை எடுத்து இண்டிகோ விளக்கம் விமானம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025