NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சந்தேஷ்காலி வழக்கை திரும்ப பெற்ற 2 பெண்கள்: பாஜக வற்புறுத்தியதாக குற்றச்சாட்டு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சந்தேஷ்காலி வழக்கை திரும்ப பெற்ற 2 பெண்கள்: பாஜக வற்புறுத்தியதாக குற்றச்சாட்டு
    மூன்று பெண்களில் இருவர், தங்களது குற்றச்சாட்டை வாபஸ் பெற்றுள்ளனர்

    சந்தேஷ்காலி வழக்கை திரும்ப பெற்ற 2 பெண்கள்: பாஜக வற்புறுத்தியதாக குற்றச்சாட்டு

    எழுதியவர் Venkatalakshmi V
    May 09, 2024
    04:46 pm

    செய்தி முன்னோட்டம்

    திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார புகார்கள், மேற்கு வங்காளத்தின் வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் அமைதியின்மையை ஏற்படுத்திய சில மாதங்களுக்கு பின்னர், சந்தேஷ்காலியைச் சேர்ந்த மூன்று பெண்களில் இருவர், தங்களது குற்றச்சாட்டை வாபஸ் பெற்றுள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

    TMC தலைவர்களால் தான் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று புகாரளித்த ஒரு பெண் தற்போது கூறியுள்ளார்.

    அதுமட்டுமின்றி, உள்ளூர் பாஜக உறுப்பினர்கள், தங்களை ஒரு வெற்று காகிதத்தில் கையெழுத்திட வற்புறுத்தி, அதில் போலி புகார் எழுதப்பட்டு, அதுவே மகளிர் ஆணையத்திடம் சமர்பிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

    சந்தேஷ்காலி விவகாரத்தில் முன்னாள் டிஎம்சி தலைவர் ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது ஆதரவாளர்கள், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், நிலத்தை அபகரித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

    வற்புறுத்தல்

    பாஜக உறுப்பினர்களால் வற்புறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு

    உள்ளூர் பாஜக மகிளா மோர்ச்சா நிர்வாகி மற்றும் பிற கட்சி உறுப்பினர்கள் தங்களது வீட்டிற்குச் வந்து வெற்றுத் தாளில் கையெழுத்திடச் சொன்னதாக அந்தப் பெண்கள்கள் தற்போது குற்றம் சாட்டியுள்ளனர்.

    "பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் என் பெயரைச் சேர்ப்பதற்காக, என் கையொப்பத்தைக் கேட்டார்கள். பின்னர், பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக புகார் அளிக்க என்னை...காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்," என்று பாதிக்கப்பட்ட ஒரு பெண் கூறினார்.

    பொய்யான கற்பழிப்பு குற்றச்சாட்டை வாபஸ் பெற்றதால், அச்சுறுத்தல்கள் மற்றும் சமூகப் புறக்கணிப்பு போன்றவற்றை மேற்கோள் காட்டி, சந்தேஷ்காலி காவல் நிலையத்தில் அந்தப் பெண் புதிய புகார் ஒன்றையும் தற்போது பதிவு செய்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சந்தேஷ்காலி
    பாஜக
    திரிணாமுல் காங்கிரஸ்
    மேற்கு வங்காளம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    சந்தேஷ்காலி

    ஷேக் ஷாஜகானை கைது செய்யுங்கள்: சந்தேஷ்காலி வழக்கில் மேற்கு வங்காளத்திற்கு உயர் நீதிமன்றம் கண்டனம் மேற்கு வங்காளம்
    சந்தேஷ்காலி வழக்கில் திரிணாமுல் கட்சியின் ஷேக் ஷாஜகான் கைது திரிணாமுல் காங்கிரஸ்

    பாஜக

    காங்கிரஸுக்கு ரூ.1,800 கோடிக்கு மேல் வரி நோட்டீஸ்: பாஜக சதி செய்வதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு காங்கிரஸ்
    'ஆட்சி மாறினால் ஜனநாயகத்தை சிதைப்பவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்': ராகுல் காந்தி சூளுரை காங்கிரஸ்
    எல்.கே.அத்வானியின் இல்லத்திற்கு சென்று பாரத ரத்னா விருது வழங்கினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு  பாரத ரத்னா
    4 நாள் பயணமாக மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி பிரதமர்

    திரிணாமுல் காங்கிரஸ்

    மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலால் வன்முறை: 9 பேர் பலி மேற்கு வங்காளம்
    வீடியோ: மேற்கு வங்கத்தில் வாக்குப்பெட்டியுடன் தப்பியோடிய நபர்  மேற்கு வங்காளம்
    மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு பெரும் வெற்றி  மேற்கு வங்காளம்
    எஸ்.ஜெய்சங்கர் உட்பட 11 மாநிலங்களவை எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு  மாநிலங்களவை

    மேற்கு வங்காளம்

    மணிப்பூரை அடுத்து மேற்கு வங்கத்தில்: அரை நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட 2 பெண்கள் மணிப்பூர்
    ஐபோன் வாங்குவதற்காக 8 மாத குழந்தையை விற்ற மேற்கு வங்காள தம்பதி இந்தியா
    'ஜனநாயகத்தின் சாம்பியன்கள்': எதிர்க்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி  எதிர்க்கட்சிகள்
    சிக்கிமில் திடீர் வெள்ளம்: 23 ராணுவ வீரர்கள் மாயம் சிக்கிம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025