LOADING...
சபரிமலை தங்கத் திருட்டு வழக்கு: சாட்சியாக மாறுகிறாரா பிரபல நடிகர்?
முன்னணி நடிகர் ஜெயராமிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

சபரிமலை தங்கத் திருட்டு வழக்கு: சாட்சியாக மாறுகிறாரா பிரபல நடிகர்?

எழுதியவர் Venkatalakshmi V
Jan 30, 2026
12:27 pm

செய்தி முன்னோட்டம்

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சொந்தமான தங்க ஆபரணங்கள் மற்றும் காணிக்கை தங்கம் மாயமான விவகாரத்தில், மலையாள மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஜெயராமிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தியுள்ளனர். சபரிமலை சந்நிதானத்தில் இருந்த சில தங்க பொருட்கள் மற்றும் ஆபரணங்கள் காணாமல் போனதாக எழுந்த புகாரை அடுத்து, கேரள அரசு இதற்கென ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்தது. இந்த குழு கடந்த சில மாதங்களாகக் கோவில் அதிகாரிகள், தேவசம் போர்டு ஊழியர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

விசாரணை

முக்கிய சாட்சியாக ஜெயராமை மாற்ற திட்டமிடும் SIT

நடிகர் ஜெயராம் சபரிமலை கோவிலின் தீவிர பக்தர் ஆவார். அவர் அவ்வப்போது கோவிலுக்குத் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களைக் காணிக்கையாக வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த நிலையில், அவர் வழங்கிய சில காணிக்கைப் பொருட்கள் மற்றும் அவர் கோவிலுக்கு சென்றிருந்த சமயத்தில் நடைபெற்ற சில நடைமுறைகள் குறித்து விளக்கம் பெறவே புலனாய்வு குழு அவரை அணுகியுள்ளது. கொச்சியில் உள்ள ஜெயராமின் இல்லத்திற்குச் சென்று அவரிடம் விரிவான வாக்குமூலத்தை SIT குழுவினர் பெற்றுள்ளனர். இந்தத் தகவல்கள் அனைத்தும் வீடியோ பதிவாகவும், எழுத்துப்பூர்வமாகவும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வழக்கில் நடிகர் ஜெயராமை ஒரு முக்கிய சாட்சியாக சேர்க்கவும் புலனாய்வு குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Advertisement