ரஷ்யாவின் எண்ணெயை வாங்கும் இந்தியாவின் முடிவை திடமாக ஆதரித்து பேசிய எஸ்.ஜெய்சங்கர்
செய்தி முன்னோட்டம்
மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை மீறி ரஷ்யாவின் எண்ணெயை வாங்கும் இந்தியாவின் முடிவை உறுதியாக ஆதரித்துள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்.
சனிக்கிழமையன்று முனிச் பாதுகாப்பு மாநாட்டில் நடந்த குழு விவாதத்தின் போது, அமெரிக்காவுடனான இந்தியாவின் வளர்ந்து வரும் உறவுகளுக்கு மத்தியில் ரஷ்யாவுடனான இந்தியாவின் தொடர் வர்த்தகம் குறித்து ஜெய்சங்கரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க கூடாது என்று கூறி இந்தியாவின் மீது பல பொருளாதாரத் தடைகளை மேற்கத்திய நாடுகள் விதித்துள்ளன.
ஆனால், அதை மீறி ரஷ்யாவுடனான உறவுகளை இந்தியா பேணி வருகிறது. இந்தியாவின் இந்த செயல் மேற்கத்திய நாடுகளுக்கு பிடிக்கவில்லை.
இந்தியா
'இந்தியா புத்திசாலித்தனமாக செயல்படுகிறது'
இந்நிலையில், அது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "அது ஒரு பிரச்சனையா? அது ஏன் ஒரு பிரச்சனையாக இருக்க வேண்டும்? நான் பல விருப்பங்களைக் கொண்டிருக்கும் அளவுக்கு புத்திசாலியாக இருந்தால், நீங்கள் என்னைப் போற்ற வேண்டும்." என்று கூறியுள்ளார்.
ஜெய்சங்கரின் பதிலை கேட்ட அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் ஜேர்மன் வெளியுறவு மந்திரி அன்னலெனா பேர்பாக் ஒரு புன் சிரிப்பை வெளிப்படுத்தினர்.
ஒன்றோடொன்று இணைந்திருக்கும் உலகல் நாடுகள் பரிமாணமற்ற உறவுகளைப் பேண வேண்டும் என்று எதிர்பார்ப்பது யதார்த்தத்திற்குப் புறம்பானது என வெளியுறவுத்துறை அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
ட்விட்டர் அஞ்சல்
வெளியுறவுத்துறை அமைச்சர் கூறிய பதில்
EAM Jaishankar was again asked the same question of "buying Russian Oil" at Munich Security Conference in front of US secretary of state Antony Blinken.
— Incognito (@Incognito_qfs) February 17, 2024
Jaishankar: I am smart enough to have multiple alliances. You should be admiring me.
S Jaishankar is Captain Cool of politics… pic.twitter.com/MIid1KHfxC