NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை - பயனாளிகளை தேர்வு செய்ய சிறப்பு முகாம்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை - பயனாளிகளை தேர்வு செய்ய சிறப்பு முகாம்கள்
    பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை - பயனாளிகளை தேர்வு செய்ய சிறப்பு முகாம்கள்

    பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை - பயனாளிகளை தேர்வு செய்ய சிறப்பு முகாம்கள்

    எழுதியவர் Nivetha P
    Jul 07, 2023
    11:42 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் உரிமைத்தொகையாக ரூ.1000 தரப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக தற்போதைய ஆளும்கட்சியான திமுக கூறியிருந்தது.

    அதேப்போல் இத்திட்டம் குறித்த அறிவிப்பு இந்தாண்டு நிதிநிலை அறிக்கையிலும் இடம்பெற்றிருந்தது.

    அப்போது இந்த திட்டம் குறித்த விளக்கத்தினையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியிருந்தார்.

    அதன்படி, மீனவ மகளிர், நடைபாதையில் வணிகம் செய்வோர், ஒருநாளைக்கு பல்வேறு வீடுகளில் வீட்டுவேலை செய்யும் பெண்கள், கட்டுமானத்தொழில் செய்யும் பெண்கள், சிறியக்கடைகள்-வணிக கடைகள் போன்ற சிறுசிறு நிறுவனங்களில் பணிபுரிந்து குறைந்தளவு வருமானம் பெறும் பெண்கள் போன்றோருக்கு இந்த உரிமைத்தொகை அவரவர் வங்கிக்கணக்கிலேயே நேரடியாக செலுத்தப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

    இதன்படி, தமிழகத்திலுள்ள சுமார் ஒரு கோடி பெண்களுக்கு இந்த உரிமைத்தொகையினை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    தொகை 

    நியாய விலை கடைகளின் அருகிலேயே சிறப்பு முகாம்கள் 

    இந்நிலையில் தற்போது தமிழகத்தில் இந்த உரிமைத்தொகையினைப்பெற தகுதியான பெண்களை தேர்ந்தெடுக்கவும், அவர்களின் விவரங்களை சேகரிக்கவும் ஏதுவாக சிறப்பு முகாம்களை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    இந்த முகாம்கள் நியாய விலை கடைகளின் அருகிலேயே அமைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    வருவாய்த்துறை அலுவலர்கள் கொண்டு இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

    இதனையடுத்து நியாயவிலை கடைகளுக்கு வரும் பெண்கள் அருகிலுள்ள முகாமிற்கு சென்று தங்கள் விவரங்களை அளிக்கலாம்.

    இந்த முகாம்கள் மூலம் பெண்களின் ஆதார்எண், வங்கிக்கணக்கு எண், எவ்விதக்குடும்ப அட்டை வைத்துள்ளனர், அவர்களுக்கு குடும்பத்தில் உள்ளோர் செய்யும் தொழில் குறித்த விவரங்கள் உள்ளிட்டவை சேகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    அடுத்த வாரத்தில் இருந்து இந்த முகாம்கள் மாநிலம் முழுவதும் துவங்கவுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திமுக
    மு.க ஸ்டாலின்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    திமுக

    முதல்வர் ஸ்டாலினின் குடும்பம் ஒரே ஆண்டில் 30,000 கோடி ரூபாய் ஊழல் செய்தது: பாஜக  தமிழ்நாடு
    உதயநிதி, சபரீசனிடம் இருந்து என்னைப் பிரிக்க முயற்சிக்கிறார்கள்: ஆடியோ சர்ச்சை பற்றி பேசிய PTR  தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசியலில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்திய 'திமுக ஃபைல்ஸ்' ஓர் பார்வை  தமிழ்நாடு
    டாஸ்மாக் வருமானத்தை நம்பி அரசு இயங்கவில்லை - செந்தில் பாலாஜி  தமிழக அரசு

    மு.க ஸ்டாலின்

    விழுப்புரம் கள்ளச்சாராய விவகாரம் - 12 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி சிபிசிஐடி
    முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு செல்லும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  தமிழ்நாடு
    சிங்கப்பூர் அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தினார் மு.க.ஸ்டாலின்  ஜப்பான்
    விழுப்புரம் கள்ளச்சாராய வழக்கு - 11 பேரை 3 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி சிபிசிஐடி

    தமிழ்நாடு

    2024 நாடாளுமன்ற தேர்தலினையொட்டி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி துவக்கம்  தேர்தல்
    தமிழ்நாட்டில் பண்ணை பசுமை கடைகளில் ரூ.60க்கு விற்கப்படும் தக்காளி தமிழக அரசு
    விபத்தில் குடும்பத்தையே இழந்த மாணவி அமுதாவின் மேற்படிப்புக்கு உதவ முன்வந்தது பள்ளிக்கல்வித்துறை சேலம்
    பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கு ஜூலை 23 வரை விண்ணப்பிக்கலாம் பொறியியல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025