NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழக கோவில்களில் கோடிக்கணக்கில் கொள்ளை: அதிர்ச்சி ஏற்படுத்தும் ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழக கோவில்களில் கோடிக்கணக்கில் கொள்ளை: அதிர்ச்சி ஏற்படுத்தும் ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல்
    வரி என்ற பெயரில், மூன்று ஆண்டுகளில் 1,153 கோடி ரூபாய் வசூல்

    தமிழக கோவில்களில் கோடிக்கணக்கில் கொள்ளை: அதிர்ச்சி ஏற்படுத்தும் ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 03, 2024
    08:02 am

    செய்தி முன்னோட்டம்

    ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல், தமிழகத்தில் கடந்த ஆட்சி காலங்களில், கோவில்களில் வரி என்ற பெயரில், மூன்று ஆண்டுகளில் 1,153 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

    நேற்று ஈரோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற ஆருத்ரா கபாலீஸ்வரர் கோவிலில் அவர் தரிசனம் செய்தபின், நிருபர்களிடம் பேசிய பொன்மணிக்கவேல் இவ்வாறு கூறினார்.

    "ஈரோட்டின் பழமையான ஆருத்ரா கபாலீஸ்வரர் கோவிலின் தொன்மை அழிக்கப்பட்டு, பழைய சிலைகள் திருடப்பட்டு புதியவை பதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு தமிழகத்தை வந்த பிரதமர், கோவில் சொத்து கொள்ளை அடிக்கப்படுவதாக கூறியதை உறுதிப்படுத்தும் விதமாக, இந்த கோவிலில் மோசடி நடந்துள்ளது" என்றார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    பிரதமர் கோவில் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்படுவதாக சொன்னதை உறுதிப்படுத்தும் வகையில் ஈரோடு ஆருத்ரா கபாலீஸ்வரர் கோவில் மோசடி நிகழ்ந்துள்ளது - பொன்மாணிக்கவேல் குற்றச்சாட்டு#Erode | #Kapaleeshwarar | #TempleIssue | #Ponmanickavel | #PolimerNews pic.twitter.com/EuMxZITaOU

    — Polimer News (@polimernews) December 3, 2024

    வரி 

    கோவில் கணக்குகளில் தணிக்கை

    மேலும், அவர் கூறியதாவது: "கடந்த ஆட்சியிலும், தற்போதைய ஆட்சியிலும், கோவிலுக்கு வரி விதிப்பது மட்டுமல்லாமல், கோவில் கணக்குகளை தணிக்கை செய்வதாக தெரியப்படுகிறது. 2018-ல் 327 கோடி, 2019-ல் 348 கோடி, 2021-ல் 478 கோடி ரூபாய் வரி எடுத்துள்ளனர். தற்போது, தமிழக ஹிந்து கோவில்களிலிருந்து 656 கோடி ரூபாய் வரியாக எடுக்கப்படுகிறது. இதன் பொருள், மாதந்தோறும் 56 கோடி ரூபாய் வரி வசூலிக்கப்படுகிறது." என்றார்.

    தமிழக கோவில்களில் இருந்து பண்டைய சிலைகள் கடத்தப்படுவது குறித்து ஐ.ஜி பொன்மணிக்கவேல் நடவடிக்கை எடுத்து வந்தார்.

    அவருடைய முயற்சியில் வெளிநாடுகளில் இருந்து பல ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோவில்கள்
    தமிழக அரசு
    தமிழகம்

    சமீபத்திய

    தொடர்ந்து அபத்தமாக உளறும் அமெரிக்கா அதிபர் டிரம்ப்: '0 வரி கட்டணங்கள்' எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்கிறார் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    இந்தியா அமெரிக்காவிற்கு '0-கட்டண' வர்த்தக ஒப்பந்தத்தை வழங்கியுள்ளதாக டிரம்ப் கூறுகிறார் இந்தியா
    இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தானின் கிரானா மலைகளில் கதிர்வீச்சு கசிவா? அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு மறுக்கிறது பாகிஸ்தான்
    கெனிஷா வாழ்வின் ஒளி... நல்ல தந்தையாக தொடர்வேன்.. ஆர்த்தி ரவியின் அறிக்கைக்கு ரவி மோகன் பதில் ரவி

    கோவில்கள்

    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு
    பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள் தமிழ்நாடு
    தமிழக கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான செலவினத்தொகை ரூ.50,000ஆக அதிகரிப்பு தமிழக அரசு
    பழனி முருகர் கோயில் உண்டியல் வசூல் - ரூ.7 கோடி வருவாய் திண்டுக்கல்

    தமிழக அரசு

    முறைகேடுகளை தவிர்ப்பதற்காக மாவட்டந்தோறும் கண்காணிப்பு குழுக்களை அமைக்கிறது பள்ளிக் கல்வித்துறை பள்ளிக்கல்வித்துறை
    சென்னையில் புதிதாக 118 ஏக்கர் பரப்பில் பசுமைவெளி பூங்கா அமைக்க உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு சென்னை
    தமிழக பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு: வெளியான அறிவிப்பு பள்ளிகளுக்கு விடுமுறை
    'பதவியல்ல.. பொறுப்பு'; துணை முதலைச்சராக பதவியேற்கும் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி உதயநிதி ஸ்டாலின்

    தமிழகம்

    தமிழக வரலாற்றில் முதல்முறை; தலைமை தேர்தல் அதிகாரியாக பெண் நியமனம் தேர்தல் ஆணையம்
    இன்றைய (நவம்பர் 9) தங்கம் வெள்ளி விலை நிலவரம் தங்கம் வெள்ளி விலை
    குரூப் 2 காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு; டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி
    புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதிக்கு வாய்ப்பு; தமிழகத்தில் நவம்பர் 12 முதல் கனமழை பெய்யும் என எச்சரிக்கை வானிலை அறிக்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025