
முதலீடு என்ற பெயரில் சைபர் கிரைம் மோசடியில் ரூ.2 கோடியை இழந்த ஆந்திர பிரதேச பேராசிரியர்
செய்தி முன்னோட்டம்
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவர் போலி முதலீட்டு ஆலோசனை வழங்கும் வாட்ஸ்அப் குழுவில் ஈர்க்கப்பட்டு, ஒரு அதிநவீன சைபர் கிரைம் மோசடியில் கிட்டத்தட்ட ரூ.2 கோடியை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட நபரான பாண்டிச்சேரியின் ஜிப்மர் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான டாக்டர் எம்.பத்மானாபனே மௌனிசாமி, ஜூன் 18 அன்று காவல்துறையில் புகார் அளித்தார். அதில் சட்டப்பூர்வமான நிதி நிறுவனமான நுவமா ஃபண்ட்ஸ் பிராண்டிங்கைப் பிரதிபலிக்கும் மோசடி மூலம் தான் எவ்வாறு ஏமாற்றப்பட்டேன் என்பதை விவரித்தார். டாக்டர் மௌனிசாமி, 'எச்-10 நுவமா ஹெல்த் குரூப்' என்ற வாட்ஸ்அப் குழுவில் சேர்க்கப்பட்டார். அங்கு உறுப்பினர்களுக்கு நிபுணர் முதலீட்டு வழிகாட்டுதலை வழங்குவதாகக் கூறியுள்ளனர்.
நிறுவனம்
பிரபல நிறுவனம் என்பதால் நம்பிய டாக்டர்
நுவமா (முன்னர் எடெல்வைஸ்) உடனான பரிச்சயம் காரணமாக, பேராசிரியர் குழு உண்மையானது என்று நம்பினார். கங்கனா என்ற பெண் விரைவில் அவரைத் தொடர்பு கொண்டு, நுவமா பெயரைக் கொண்ட ஒரு போலி வலைத்தளத்தில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். பேராசிரியர் ஆரம்பத்தில் ரூ.10,000 முதலீடு செய்து அதற்கு ஈடாக ரூ.13,000 பெற்றார், இது அவரது நம்பிக்கையை அதிகரித்தது. ஐந்து வாரங்களுக்கு மேலாக, அவர் அதிக செயல்திறன் கொண்ட போர்ட்ஃபோலியோக்கள் என்று நினைத்தவற்றில் ரூ.1.9 கோடியை முதலீடு செய்தார். மே மாத இறுதிக்குள், போலி தளம் ரூ.35 கோடி இருப்பு வைத்திருந்ததைக் காட்டியது. அவர் ரூ.5 கோடியை எடுக்க முயன்றபோது, மோசடி செய்பவர்கள் ப்ராஸஸிங் கட்டணத்தைக் கோரினர்.
மோசடி
கட்டணமாக லட்சக் கணக்கில் மோசடி
இறுதியில் அவரிடமிருந்து கூடுதலாக ரூ.7.9 லட்சத்தை மோசடி செய்தனர். அதிலிருந்த பணத்தை எடுக்க முடியாத நிலையில், மூத்த அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு பணத்தை போலியான நபர்களிடம் மேலும் கொடுத்துள்ளார். இறுதியில் மோசடியை உணர்ந்த பேராசிரியர் புகார் கொடுத்தார். வாட்ஸ்அப் மற்றும் சமூக ஊடகங்களில் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் இதுபோன்ற முதலீட்டு சலுகைகளுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் பயனர்களை தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். ஆனாலும், பேராசை காரணமாக இதுபோன்ற மோசடிக்கு மக்கள் இரையாவது தொடர் கதையாகவே உள்ளது.